உ.பி.: வயலில் சிறுநீர் கழித்த 5 வயது சிறுவனின் 'அந்த' உறுப்பை அறுத்த 2 பேர்
லக்னோ: உத்தர பிரதேச மாநிலத்தில் வயலில் சிறுநீர் கழித்த சிறுவனின் மர்ம உறுப்பை வயல் உரிமையாளர் அறுத்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
உத்தர பிரதேச மாநிலம் பிரதாப்கர் மாவட்டம் கோராலி கிராமத்தைச் சேர்ந்தவர் சேஷ்ராம். செங்கல் சூளையில் வேலை செய்து வருகிறார். அவரது
மகன் ரித்தேஷ்(5). ரித்தேஷ் அதே ஊரைச் சேர்ந்த ஒருவரின் வயலில் சிறுநீர் கழித்துள்ளான். இதை பார்த்த வயல் உரிமையாளரான துர்கேஷ் மவுரியா மற்றும் அவரது மகன் சேர்ந்து ரித்தேஷை பிடித்து அடித்துள்ளனர்.
அப்படியும் ஆத்திரம் தீராத அவர்கள் சிறுவனின் மர்ம உறுப்பை அறுத்துவிட்டனர். ரத்தம் கொட்ட கொட்ட சிறுவன் வலியால் துடித்தபடியே ஒரு வழியாக வீட்டுக்கு சென்று நடந்ததை கூறினான்.
இதையடுத்து சிறுவன் அலகாபாத்தில் உள்ள மருத்துவமனை ஒன்றில் அனுமதிக்கப்பட்டுள்ளான். இந்நிலையில் இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் மவுரியா மற்றும் அவரது மகனை தேடி வருகிறார்கள்.












Click it and Unblock the Notifications