உயர் சாதியினர் ஆதிக்கம் கோலோச்சும் மோடி அமைச்சரவை!
டெல்லி: பிரதமர் நரேந்திர மோடியின் அமைச்சரவை உயர் சாதியினருக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கப்பட்டுள்ளது. பிரதமர் நரேந்திர மோடி மற்றும் 45 அமைச்சர்கள் நேற்று பதவி ஏற்றனர். இவர்களில் 23 பேர் கேபினட் அமைச்சர்கள்; 22 பேர் இணை அமைச்சர்கள்.
கேபினட்டில் 12 உயர் சாதியினர்..
மோடி உள்ளிட்ட கேபினட் உறுப்பினர்களில் மொத்தம் 12 பேர் உயர் சாதியினர்.
என்னென்ன சாதியினர்?
பிராமணர்கள், ராஜ்புத்திரர்கள், கயஸ்தாஸ், வைசியர்கள் இவர்கள்தான் வட இந்தியாவில் உயர் ஜாதியினர். அதேபோல் லிங்காயத்துகள், ஒக்கலிகா மற்றும் மராத்தாஸும் கேபினட்டில் இடம்பெற்றுள்ளனர்.
5 ஓபிசி, 2 தலித்துகள்..
எஞ்சிய 11 பேரில் 5 பேர் இதர பிற்படுத்தப்பட்டோ; இருவர் தலித்துகள்; ஒருவர் பழங்குடி இனத்தவர்.
தனிப்பொறுப்புடன் கூடிய இணை அமைச்சர்கள்
10 தனிப்பொறுப்புடன் கூடிய இணை அமைச்சர்களில் 5 பேர் உயர் சாதியினர்; 4 பேர் இதர பிற்படுத்தப்பட்டோர்; பழங்குடி இனத்தவர் ஒருவர்.
12 இணை அமைச்சர்கள்
இணை அமைச்சர்கள் 12 பேரில் 4 பேர் பழங்குடி இனத்தவர், 4 பேர் இதர பிற்படுத்தப்பட்டோர். 3 பேர் உயர்சாதியைச் சேர்ந்தவர்கள்.
பிற்படுத்தப்பட்டோரில்..
பிற்படுத்தப்பட்டோரில் கூட வலிமை வாய்ந்த ஜாட், குஜ்ஜார்கள், யாதவர்கள், கம்மாஸ் ஜாதியினருக்கே பிரதிநிதித்துவம் வழங்கப்பட்டுள்ளது. மிகப் பிற்படுத்தப்பட்ட பிரிவைச் சேர்ந்த குஸ்வாஹாவுக்கு ஒரு பிரதிநிதித்துவம் வழங்கப்பட்டுள்ளது.