சிவில் சர்வீஸ் தேர்வு முடிவுகள் வெளியீடு.. தமிழக அளவில் பிரதாப் முருகன் சாதனை
கடந்த ஆண்டு நடந்த யுபிஎஸ்சி சிவில் சர்வீஸ் தேர்வில் தமிழக அளவில் பிரதாப் முருகன் முதலிடம் பெற்றுள்ளார்.
டெல்லி: 2016 ம் ஆண்டுக்கான சிவில் பதவிகளுக்கான யுபிஎஸ்சி தேர்வுக்கான இறுதி முடிவுகளை மத்திய பணியாளர் தேர்வாணையம் (யுபிஎஸ்சி) இன்று வெளியிட்டுள்ளது. இதில் தமிழக அளவில் பிரதாப் முருகன் முதலிடம் பிடித்துள்ளார்.
ஐஏஎஸ், ஐபிஎஸ் உள்ளிட்ட மத்திய அரசின் சிவில் பதவிகளுக்கான யுபிஎஸ்சி உள்ளிட்ட தேர்வுகளை மத்தியப் பணியாளர் தேர்வாணையம் ஆண்டுதோறும் நடத்துகிறது. அந்தவகையில் கடந்த ஆண்டு நடந்த யுபிஎஸ்சி சிவில் சர்வீஸ் தேர்வு முடிவுகள் தற்போது யுபிஎஸ்சி இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளன.

இதில், தமிழக அளவில் பிரதாப் முருகன் முதல் முயற்சியிலேயே வெற்றி பெற்று முதலிடம் பிடித்துள்ளார். மேலும், தேசிய அளவில் யுபிஎஸ்சி தேர்வில் பிரதாப் முருகன் 21வது இடம் பிடித்துள்ளார். கே.ஆர்.நந்தினி என்பவர் தேசிய அளவில் முதலிடம் பிடித்துள்ளார்.
அல்மோல்ஷெர்சிங் பேடி 2வது இடமும், ரொனான்கி 3வது இடமும் பிடித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. இதில் 1099 பேர் பல்வேறு பணியிடங்களுக்கு தேர்வாகியுள்ளனர். இதில் 1099 பேர் பல்வேறு பணியிடங்களுக்கு தேர்வாகியுள்ளனர்.












Click it and Unblock the Notifications