சிவில் சர்வீஸ் தேர்ச்சிக் காரணிகளில் ஆங்கிலம் கிடையாது- மத்திய அரசு
டெல்லி: யுபிஎஸ்சி சிவில் சர்வீஸ் தேர்வில் 20 மதிப்பெண்ணுக்கான ஆங்கிலப் பகுதி தேர்ந்தெடுக்கும்போது அது கருத்தில் கொள்ளப்படாது என்றும், 2011 ஆம் ஆண்டில் தேர்வு எழுதிய மாணவர்களுக்கு மற்றொரு வாய்ப்பு அளிக்கப்படும் எனவும் மத்திய அரசு அறிவித்துள்ளது.
மத்திய அரசு வெளியிட்டுள்ள புதிய விதிமுறைகளின்படி, "சிவில் சர்வீஸ் தேர்வின் இரண்டாம் தாளில் வரும் ஆங்கிலத்தொகுதி வினாக்கள் இனி தேர்ச்சியை நிர்ணயிக்கும் காரணிகளில் சேர்க்கப்படமாட்டாது" என்று மத்திய அமைச்சர் ஜிதேந்திர சிங் இன்று நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளார்.

அவர் மேலும், "2011 ஆம் ஆண்டிற்கான சிவில் சர்வீஸ் தேர்வினை எழுதியவர்கள் 2015 ஆம் ஆண்டின் மற்றொரு வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ள முடியும்" என்றும் தெரிவித்துள்ளார்.
முன்னதாக இதுதொடர்பாக போராட்டங்கள் வெடித்தன. கடந்த சில நாட்களாக லோக்சபா மற்றும் ராஜ்ய சபாவிலும் இந்த பிரச்சனையானது தீவிரமடைந்தது. 100க்கும் மேற்பட்ட சிவில் சர்வீஸ் மாணவர்கள் டெல்லி தெருக்களில் மிகக் கடுமையான போராட்டத்தில் ஈடுபட்டிருந்தனர். மேலும், ஆகஸ்ட் 24 ஆம் தேதி நடக்க இருக்கும் தேர்வையும் தள்ளி வைக்கக் கோரிக்கை விடுத்தனர்.
போராட்டக்குழுவினர் முன்வைத்த கோரிக்கைகளில், இந்தி மற்றும் மற்ற மொழிகளை தாய்மொழியாகக் கொண்டவர்களுக்கு இது மிகவும் கடினமாக உள்ளது என்று கூறியிருந்தனர். இதனையடுத்து இன்று ஜிதேந்திர சிங் இந்த அறிவிப்பினை வெளியிட்டுள்ளார்.
சிவில் சர்வீஸ் தேர்வானது 3 நிலைகளில் நடக்கின்றது. தகுதித்தேர்வு, முதன்மைத்தேர்வு, நேர்முகத்தேர்வு என்பது அம்மூன்று படிநிலைகள் ஆகும். இந்தியக் குடிமைபணிக்கான அதிகாரிகள் இத்தேர்வின் மூலமாகத்தான் தேர்ந்தெடுக்கப்படுகின்றார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
-
லால்குடியில் களமிறங்கிய ஆதவ் அர்ஜுனா மாமியார்.. அதிமுகவில் இணைந்த 1 மாதத்தில் சீட் கொடுத்த எடப்பாடி -
ரசிகர்கள் எதிர்பார்த்த வீடியோவை வெளியிட்ட திரிஷா.. ஒரு வழியாக எல்லோரும் கேட்டது நடந்துடுச்சு.. குவியும் பாராட்டு -
ஓசூரில் சத்தமின்றி புரட்சி.. ரெடியாகும் தமிழ்நாட்டின் 6-வது பிரம்மாண்ட 'டைடல் பார்க்'.. தரமான வேகம் -
பாதாளத்தில் பாய்ந்த அமெரிக்கா! டிரம்ப் கொஞ்சம் கூட எதிர்பார்க்காத சம்பவம்.. மொத்தமா போச்சு! -
வாழ்க்கை துணை கிடைச்சிடுச்சு.. இவர்தான் ஜென்டில்மேன்! சர்ச்சைக்கு மத்தியில் திரிஷாவின் லேட்டஸ்ட் பதிவு -
தமிழ் புத்தாண்டு பலன்: குருவின் அருளால் மகர ராசிக்கு அடிக்கும் ஜாக்பாட்.. பிரகாசமாகப் போறீங்க -
இடி, மின்னலுடன் மழை கொட்டப்போகுது.. அடிக்கும் வெயிலுக்கு ஜில் அப்டேட் கொடுத்த வானிலை மையம்! -
ஸ்டாலின் களமிறக்கும் "மிசைல்" விஐபி! அதிமுக எதிர்பார்க்கல! விஸ்வநாதனுக்கு செக்? திமுக சர்ப்ரைஸ் மூவ் -
உங்கள் வீட்டு பீரோவில் 62 சவரன் தங்கம் இருக்கா? நகைக்கு இந்த ஒரு கணக்கு இல்லனா ஐடி நோட்டீஸ் வரலாம் -
பெங்களூர் மாணவியிடம் கிட்ட நெருங்கிய ஆசிரியர்! அந்த பயங்கர காட்சி.. உடனே செருப்பை கழட்டி! என்னாச்சு -
செங்கோட்டையனுக்கு பதில் கோபியில் பிரபு! 127 வேட்பாளர்களை அறிவித்தார் எடப்பாடி பழனிசாமி -
எடப்பாடி பழனிசாமி வைத்த பொறி.. சிக்கிய அண்ணாமலை.. சல்லி சல்லியாக உடைந்த பர்னிச்சர்












Click it and Unblock the Notifications