சிவில் சர்வீஸ் தேர்ச்சிக் காரணிகளில் ஆங்கிலம் கிடையாது- மத்திய அரசு
டெல்லி: யுபிஎஸ்சி சிவில் சர்வீஸ் தேர்வில் 20 மதிப்பெண்ணுக்கான ஆங்கிலப் பகுதி தேர்ந்தெடுக்கும்போது அது கருத்தில் கொள்ளப்படாது என்றும், 2011 ஆம் ஆண்டில் தேர்வு எழுதிய மாணவர்களுக்கு மற்றொரு வாய்ப்பு அளிக்கப்படும் எனவும் மத்திய அரசு அறிவித்துள்ளது.
மத்திய அரசு வெளியிட்டுள்ள புதிய விதிமுறைகளின்படி, "சிவில் சர்வீஸ் தேர்வின் இரண்டாம் தாளில் வரும் ஆங்கிலத்தொகுதி வினாக்கள் இனி தேர்ச்சியை நிர்ணயிக்கும் காரணிகளில் சேர்க்கப்படமாட்டாது" என்று மத்திய அமைச்சர் ஜிதேந்திர சிங் இன்று நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளார்.

அவர் மேலும், "2011 ஆம் ஆண்டிற்கான சிவில் சர்வீஸ் தேர்வினை எழுதியவர்கள் 2015 ஆம் ஆண்டின் மற்றொரு வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ள முடியும்" என்றும் தெரிவித்துள்ளார்.
முன்னதாக இதுதொடர்பாக போராட்டங்கள் வெடித்தன. கடந்த சில நாட்களாக லோக்சபா மற்றும் ராஜ்ய சபாவிலும் இந்த பிரச்சனையானது தீவிரமடைந்தது. 100க்கும் மேற்பட்ட சிவில் சர்வீஸ் மாணவர்கள் டெல்லி தெருக்களில் மிகக் கடுமையான போராட்டத்தில் ஈடுபட்டிருந்தனர். மேலும், ஆகஸ்ட் 24 ஆம் தேதி நடக்க இருக்கும் தேர்வையும் தள்ளி வைக்கக் கோரிக்கை விடுத்தனர்.
போராட்டக்குழுவினர் முன்வைத்த கோரிக்கைகளில், இந்தி மற்றும் மற்ற மொழிகளை தாய்மொழியாகக் கொண்டவர்களுக்கு இது மிகவும் கடினமாக உள்ளது என்று கூறியிருந்தனர். இதனையடுத்து இன்று ஜிதேந்திர சிங் இந்த அறிவிப்பினை வெளியிட்டுள்ளார்.
சிவில் சர்வீஸ் தேர்வானது 3 நிலைகளில் நடக்கின்றது. தகுதித்தேர்வு, முதன்மைத்தேர்வு, நேர்முகத்தேர்வு என்பது அம்மூன்று படிநிலைகள் ஆகும். இந்தியக் குடிமைபணிக்கான அதிகாரிகள் இத்தேர்வின் மூலமாகத்தான் தேர்ந்தெடுக்கப்படுகின்றார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
-
ஓபிஎஸ் திமுகவில் சேர்ந்ததற்காக கார் ஓட்ட மறுத்தாரா டிரைவர்? வைரல் வீடியோவிற்கு விளக்கம் -
சிறகடிக்க ஆசை: சிந்தாமணி பற்றி ரோகிணிக்கு தெரிந்த உண்மை.. வீட்டை விட்டு போன மீனா! முத்து எடுத்த முடிவு -
உளவுத்துறையை விட மோசம்.. சங்கீதா, சஞ்சய் போட்ட போடு.. அப்படியே அடங்கிய விஜய்.. இப்படி வேற நடக்குதா? -
சிதம்பரம் மூலம் ஸ்டாலினுக்கு ராகுல் அனுப்பிய மெசேஜ்.. சிக்கலில் திமுக - காங்கிரஸ் கூட்டணி -
திமுக ஆதரவாளர்.. காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகையை மாற்ற ராகுல் முடிவு? புதிய தலை யார்? -
மகளிர் உரிமைத் தொகை.. இன்னும் கேம் முடியல.. வரப்போகும் 2 ‘மெகா’ அப்டேட்.. நோட் பண்ணுங்க -
"எவ்வளவு செலவானாலும் ஓகே.." கோடிகளை கொட்டும் அல்ட்ரா செல்வந்தர்கள்! இதுதான் துபாய் எஸ்கேப் பிளான் -
Lunar Eclipse: ஆண்டின் முதல் முழு சந்திர கிரகணம்.. கண்டுகளித்த மக்கள்.. என்னவெல்லாம் செய்யக்கூடாது -
Rajya sabha: மாநிலங்களவை தேர்தல்! திமுக வேட்பாளர்கள் யார் யார்? -
வீடு கொடுத்தவனுக்கே ஆபத்து.. ஏமாற்றப்பட்டதா அரபு நாடுகள்? அமெரிக்கா மீது கொதிக்கும் 'ஷேக்குகள்'! -
ஆபரேஷன் 200.. காங்கிரஸ் ‘பிக் பிளானை’ கண்டுபிடித்த ஸ்டாலின்.. முளையிலேயே கிள்ளிய அறிவாலயம்! -
ஓபிஎஸ் வந்து.. 1 வாரம் கூட ஆகலியே.. அதற்குள் அதிரும் அறிவாலய கதவுகள்.. திமுகவில் ஏடாகூட பிரச்சனை!












Click it and Unblock the Notifications