இன்னும் ஓராண்டுக்கு காஷ்மீர் செல்ல வேண்டாம்! அமெரிக்க சுற்றுலா பயணிகளுக்கு அறிவுறுத்தல்
ஸ்ரீநகர்: ஜம்மு காஷ்மீர் பகுதிக்கு தங்கள் நாட்டு சுற்றுலா பயணிகள் செல்வதை தவிர்க்குமாறு அமெரிக்கா பிறப்பித்திருந்த அறிவுரையை மேலும் ஓராண்டுக்கு நீட்டித்துள்ளது. ஜம்மு காஷ்மீர் மாநிலம் சிறந்த சுற்றுலா தலமாகும். எனவே பல நாடுகளில் இருந்தும் இங்கு சுற்றுலா பயணிகள் அதிக அளவுக்கு வருகை தருவார்கள்.

காஷ்மீரில் பதற்றம்
ஆனால் பாகிஸ்தானில் இருந்து ஊடுருவும் தீவிரவாதிகளாலும், பாகிஸ்தான் நாட்டின் அத்துமீறிய துப்பாக்கி சூடுகளாலும், ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் அவ்வப்போது பதற்றம் நிலவுகிறது.

அமெரிக்கா அதிரடி
இதன்காரணமாக தங்கள் நாட்டு சுற்றுலா பயணிகளை காஷ்மீருக்கு செல்ல வேண்டாம் என்று அமெரிக்கா ஏற்கனவே அறிவுறுத்தல் வெளியிட்டிருந்தது. மோடி அரசு பதவியேற்றுள்ள நிலையில், நிலைமை சீரடையும் என்ற எதிர்பார்ப்பு சுற்றுலா பயணிகளுக்கு ஏற்பட்டிருந்த நிலையில், அமெரிக்கா மீண்டும் தனது அறிவுறுத்தலை ஓராண்டுக்கு நீட்டியுள்ளது.

சுற்றுலாவில் பாதிப்பு
எல்லையில் தொடர்ந்து பதற்றம் நிலவுவதால் அமெரிக்கா இதுபோன்ற முடிவை எடுத்துள்ளது. அதே நேரம், அமெரிக்காவின் இந்த அறிவுறுத்தல், பள்ளத்தாக்கு மாநிலத்தின் சுற்றுலாவை வெகுவாக பாதிக்கும் என்று கூறியுள்ளார், காஷ்மீர் முதல்வர் ஒமர் அப்துல்லாவின் ஆலோசகர், தன்வீர் சாதிக்.

வீரர்களின் வாசஸ்தலம்
இமயமலை சாரலில் அமைந்துள்ள ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் மொத்தம் 1.3 மில்லியன் இந்திய ராணுவ வீரர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். இதனால் அதிக போர்வீரர்கள் குவிக்கப்பட்ட மலை வாசஸ்தலம் என்ற ஒரு பெயரும் காஷ்மீருக்கு உள்ளது.












Click it and Unblock the Notifications