உஸ்தாத் அம்ஜத் அலி கானின் சரோட் அபேஸ்: விலை ரூ. 6 கோடி?
டெல்லி: பிரபல இசைக்கலைஞர் உஸ்தாத் அம்ஜத் அலி கானின் சரோட் இசைக்கருவி அவர் லண்டனில் இருந்து விமானத்தில் டெல்லி வரும்போது திருடு போயுள்ளது.
பிரபல சரோட் இசைக்கலைஞர் உஸ்தாத் அம்ஜத் அலி கான்(68). அவர் 1960களில் இருந்தே சர்வதேச அரங்குகளில் சரோட் இசை நிகழ்ச்சிகளை நடத்தி வருகிறார். 2001ம் ஆண்டு அவருக்கு அரசு பத்ம விபூஷன் விருது வழங்கி கௌரவித்தது.

இந்நிலையில் அவர் இங்கிலாந்து தலைநகர் லண்டனில் இருந்து டெல்லி திரும்புகையில் அவரது சரோட் திருடு போயுள்ளது.
இது குறித்து அம்ஜத் அலி கான் கூறுகையில்,
லண்டனில் இருந்து விமானத்தில் டெல்லி வரும் போது எனது சரோட் கருவி காணாமல் போயுள்ளது. அந்த சரோடை நான் கடந்த 45 ஆண்டுகளாக வைத்திருந்தேன். அது மீண்டும் கிடைக்க வேண்டும். அதிசயம் நடக்கும் என்று நம்புகிறேன் என்றார். திருடு போன சரோடின் விலை ரூ.6 கோடி என்று கூறப்படுகிறது. விமான நிலையத்தில் அது திருடுப்பட்டிருக்க வேண்டும் என்று தெரிகிறது.












Click it and Unblock the Notifications