உ.பி.யில் புதிதாக 5 லட்சம் அரசு பணியாளர்களை தேர்வு செய்ய முடிவு
லக்னோ: உத்தரபிரதேசத்தில் ஒரே நேரத்தில் ஐந்து லட்சம் அரசு ஊழியர்கள் பணிக்கு சேர்க்கப்பட உள்ளனர்.
முதல்வர் அகிலேஷ் யாதவ் தலைமையில் நடைபெற்ற அமைச்சரவை கூட்டத்தில் இதற்கான முடிவு எடுக்கப்பட்டுள்ளது. இதில் 1.38 லட்சம் போலீஸ் பணியிடமும் அடங்கும். உத்தர பிரதேசத்தில் 10.45 லட்சம் அரசு ஊழியர்களை நியமிக்க முடியும். ஆனால் பல ஆண்டுகளாக சுமார் 5 லட்சம் பணியிடங்கள் காலியாகவே இருந்துவந்தன. இதை நிரப்ப முந்தைய அரசுகள் நடவடிக்கை எடுக்கவில்லை.
அரசு கல்லூரிகளுக்கான ஆசிரியர்கள், ஆய்வக உதவியாளர்கள், உள்துறை, கரும்பு வளர்ச்சி துறை, துவக்க கல்வி, சமூக நலத்துறை, வனத்துறை, பஞ்சாயத்துராஜ், சுற்றுலா, தொழில்நுட்ப கல்வி, சிறுபான்மை நலன், வருவாய் துறை உள்ளிட்டவற்றுக்கு அதிகப்படியான பணியாளர்கள் நியமிக்கப்பட உள்ளனர். இதில் காவல்துறைக்கு மட்டும் 1.38 லட்சம் பணியாளர்கள் எடுக்கப்பட உள்ளனர்.












Click it and Unblock the Notifications