ஜெ. உடலுக்கு தேவகவுடா மற்றும் சித்தராமையா, நாராயணசாமி, பினராயி உட்பட ஏராளமான முதல்வர்கள் அஞ்சலி!
ஜெயலலிதா உடலுக்கு சித்தராமையா, சந்திரபாபு நாயுடு, கேஜ்ரிவால் உள்ளிட்ட முதல்வர்கள் அஞ்சலி செலுத்தினர்.
பெங்களூர்: மறைந்த முதல்வர் ஜெயலலிதா உடலுக்கு கர்நாடக முதல்வர் சித்தராமையா, புதுவை முதல்வர் நாராயணசாமி, டெல்லி முதல்வர் கேஜ்ரிவால், ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு, ஒடிஷா முதல்வர் நவீன் பட்நாயக், கேரள முதல்வர் பினராயி விஜயன் உள்ளிட்டோர் அஞ்சலி செலுத்தினர்.
ஜெயலலிதாவின் மறைவுக்கு பீகார் முதல்வர் நிதிஷ்குமார், மேற்கு வங்க முதல்வர் மமதா பானர்ஜி உள்ளிட்ட பலரும் இரங்கல் தெரிவித்திருந்தனர். ஜெயலலிதா மறைவுக்கு மத்திய அரசு ஒருநாள் துக்கத்தை அறிவித்துள்ளது.
கர்நாடக முதல்வர் சித்தராமையா, மபி மாநில முதல்வர் சிவராஜ்சிங் சவுகான், புதுவை முதல்வர் நாராயணசாமி, ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு, டெல்லி முதல்வர் கேஜ்ரிவால், ஒடிஷா முதல்வர் நவீன் பட்நாயக், கேரளா முதல்வர் பினராயி விஜயன், மகாராஷ்டிரா முதல்வர் பட்னவிஸ் ஆகியோரும் நேரில் வந்து ஜெயலலிதா உடலுக்கு அஞ்சலி செலுத்தினர்.
Tamil Nadu: Karnataka CM Siddharamaiah reaches Rajaji Hall in Chennai to pay his last respects to #Jayalalithaa pic.twitter.com/Dz60L8uX1U
— ANI (@ANI_news) December 6, 2016
கேரள ஆளுநர் சதாசிவம், அம்மாநில முன்னாள் முதல்வர் உம்மன்சாண்டி ஆகியோரும் அஞ்சலி செலுத்தினர்.
கேரளா, கர்நாடகா, உத்தரகாண்ட், பீகார் மாநிலங்களும் ஜெயலலிதா மறைவுக்கு ஒரு நாள் அரசு முறை துக்கம் கடைபிடிப்பதாக அறிவித்துள்ளன. புதுவையில் ஏற்கனவே பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளன.
Tamil Nadu: Former PM Manmohan Singh reaches Rajaji Hall in Chennai to pay his last respects to #Jayalalithaa
— ANI (@ANI_news) December 6, 2016
தேவே கவுடா
முன்னாள் பிரதமர் தேவே கவுடாவும் ஜெயலலிதாவின் உடலுக்கு அஞ்சலி செலுத்தினார்.