Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

ராணுவ வீரர்கள் உடல்வாகு பெரியது.. எனவே நானே உள்ளே போனேன்.. சுரங்க மீட்பு குழு நபர் நெகிழ்ச்சி

Subscribe to Oneindia Tamil

உத்தரகாண்ட்: உத்தரகாண்ட் மாநிலம் உத்தரகாசியில் சுரங்கப் பாதை விபத்தில் சிக்கி உயிருக்கு போராடி வரும் 41 தொழிலாளர்களும் ஓரிரு மணி நேரங்களில் மீட்கப்படவுள்ள நிலையில், சுரங்கப்பாதை குழாய்க்குள் இருந்த தடைகளை உடைத்தது எப்படி என்பது பற்றி விவரித்துள்ளார் பொறியாளர் பிரவீன் யாதவ்.

''தேசிய பேரிடர் மீட்பு படை வீரர்கள் உட்பட பலர் சுரங்கப்பாதைக்குள் சிக்கியவர்களை மீட்கும் முயற்சியில் இறங்கினர். ஆனால் போதிய ஆக்சிஜன் இல்லாததால் அவர்களின் முயற்சிகள் தோல்வியில் முடிந்தன. இந்நிலையில் தான், நான் எனது உதவியாளர் பலிந்தர் யாதவுடன் சுரங்கத்திற்குள் செல்ல முடிவெடுத்தேன். ஆனால் தேசிய பேரிடர் மீட்பு படை வீரர்கள் முயற்சிப்பதால் அது வரை பொறுமை காக்குமாறு எனது ஓனர் சொன்னார்.''

Uttarakhand mining accident! How to break barriers? Praveen Yadav made the rescue easier!

''தேசிய பேரிடர் மீட்பு படை வீரர்கள் அனைவரும் திடகாத்திரமான உடல் வாகுடன் இருந்ததால் அவர்களால் சின்னஞ்சிறிய குழாய் வழியாக உள்ளே செல்ல முடியாத நிலை வந்தது. ஒரு கட்டத்தில் நான் களமிறங்குவதற்கான நேரம் வந்தது, கேஸ் கட்டர் மற்றும் 2 தண்ணீர் பாட்டில்களை எடுத்துக் கொண்டு எனது உதவியாளர் பலீந்தர் யாதவுடன் குழாய்க்குள் மெது மெதுவாக ஊர்ந்து சென்றேன்.''

''கேஸ் கட்டர்களை கொண்டு உலோக கர்டர்களை வெட்டி எடுத்தேன். அப்போது குழாய்க்குள் வெப்பத்தின் தாக்கம் அதிகமாக இருந்ததால் எங்களால் உள்ளே இருக்கவே முடியவில்லை. வியர்வையில் நனைந்துவிட்டோம். அதுமட்டுமல்ல தீக்காயத்தில் சிக்கிவிடுவோமா என்ற அச்சமும் எழுந்தது. மணிக்கணக்கில் இடைவிடாது முன்னெடுத்த முயற்சி என்பது மன வலிமைக்கும் பொறுமைக்கும் நடத்தப்பட்ட சோதனையாக பார்த்தேன்.''

''கேஸ் கட்டரை உபயோகிக்கும் போதெல்லாம் தீ ஜூவாலைகள் முகத்திலும், உடலிலும் பட்டது. பாதுகாப்பு கவசம், கையுறை போன்றவைகள் இருந்ததால் தீக்காயத்திலிருந்து தப்பித்தேன். சுரங்கப் பணிகளில் ஓரளவு முன் அனுபவம் இருந்ததால் ஆபத்துக்களில் சிக்கவில்லை. அமெரிக்காவின் ஆகர் இயந்திரம் வந்ததும் நானும் எனது உதவியாளர்களும் 16 மணி நேரம் முதல் 18 மணி நேரம் வரை இடைவிடாது சுரங்கத்திற்குள் மீட்பு பணியை முன்னெடுத்தோம்.''

''சுரங்கத்திற்குள் சென்று மீட்பு பணிகளுக்கு தடையாக இருந்த உலோக மெட்டீரியல்களை வெட்டி அது குளிர்ந்த பிறகு அகற்றிவிட்டு வெளியே வரும் போதெல்லாம் மக்கள் என்னை பாராட்டினார்கள். குழாயிலிருந்து வெளியே வந்ததும் சொர்க்கம் போல் உணர்ந்தேன். இதற்கு முன் இதேபோல் 4 மீட்பு பணிகளில் ஈடுபட்டு 4 பேர் உயிரை காப்பாற்றியுள்ளேன். ஆனால் உத்தரகாசி சுரங்கப்பாதை விபத்து மீட்பு என்பது மிகக் கடினமான ஆப்ரேஷன்''.

''மீட்புப் பணிகள் முடிவுற்ற பிறகு சுற்றுலா செல்ல விரும்புகிறேன். ஆனால் அதற்கு முன்னர் அஸ்ஸாமில் 400 மீட்டர் ஆற்றை கடக்கும் ப்ராஜெக்டிற்கு செல்லவுள்ளேன்.' இவ்வாறு பொறியாளர் பிரவீன் யாதவ் விவரித்துள்ளார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+