உத்தரகாண்ட் முதல்வராக பதவியேற்கும் புஷ்கர்சிங்கின் பழைய அகண்ட பாரதம் ட்வீட்டால் வெடித்தது சர்ச்சை
டேராடூன்: உத்தரகாண்ட் மாநிலத்தின் புதிய முதல்வராக பதவியேற்கும் புஷ்கர்சிங் தாமி 6 ஆண்டுகளுக்கு முன்னர் ட்விட்டரில் பதிவிட்ட அகண்ட பாரதம் வரைபடம் இப்போது சர்ச்சையாக சமூக வலைதளங்களில் வெடித்துள்ளது.
உத்தரகாண்ட் மாநிலத்தில் 4 மாதங்களில் 3-வது முதல்வராக புஷ்கர்சிங் தாமியை பாஜக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது. புஷ்கர்சிங் தாமிக்கு எதிராக பாஜகவிலேயே எம்.எல்.ஏக்கள் போர்க்கொடி தூக்கி இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

ஆனால் இதனை பாஜக திட்டவட்டமாக மறுத்தும் வருகிறது. இந்த நிலையில் 6 ஆண்டுகளுக்கு முன்னர் 2015-ம் ஆண்டில் புஷ்கர்சிங், அகண்ட பாரதம் வரைபடத்துடன் போட்ட ட்வீட் இப்போது சர்ச்சையாகி உள்ளது.
2015-ம் ஆண்டு ஆகஸ்ட் 14-ந் தேதி இந்த ட்வீட்டை போட்டிருக்கிறார் புஷ்கர்சிங் தாமி. அதில், ஜம்மு காஷ்மீரின் லடாக் பகுதிகள்; பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதிகள் இடம்பெறவில்லை. அதேநேரத்தில் இலங்கை, வங்கதேசம் என பல நாடுகளும் இந்த அகண்டபாரதம் வரைபடத்தில் இடம்பெற்றுள்ளன.
இப்போது இந்த பழைய ட்வீட்டை முன்வைத்து இப்படியானவரையா உத்தரகாண்ட் முதல்வராக பாஜக தேர்ந்தெடுத்துள்ளது என விமர்சனங்கள் முன்வைக்கப்படுகின்றன. ஏற்கனவே இந்திய வரைபடத்தை முன்வைத்து ட்விட்டர் நிர்வாகத்துக்கும் மத்திய அரசுக்கும் மோதல் போக்கு இருந்து வருவதும் குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications