டெல்லி வாகனக் கட்டுப்பாட்டில் விஐபிகளுக்கு விதி விலக்கா? டெல்லி அரசுக்கு ராபர்ட் வதேரா கேள்வி
டெல்லி: வருகிற ஜனவரி மாதம் முதல் தலைநகர் டெல்லியில் வரவிருக்கும் புதிய வாகன கட்டுப்பாடுகளில் விஐபிகளுக்கு மட்டும் விலக்கு அளிப்பது சரியா? என்று காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியின் மருமகன் ராபர்ட் வத்ரா கேள்வி எழுப்பியுள்ளார்.
டெல்லியில் காற்று மாசுபாட்டை கட்டுப்படுத்தும் வகையில் ஒற்றைப்படை எண்களுடன் முடியும் வாகனங்கள் திங்கள், புதன், வெள்ளி ஆகிய நாட்களிலும் இரட்டைப்படை எண்களுடன் முடியும் வாகனங்கள் செவ்வாய், வியாழன், சனி ஆகிய நாட்களில் மட்டுமே இயக்கப்பட வேண்டும் என்று டெல்லி மாநில அரசு அறிவித்துள்ளது.

இந்த கட்டுப்பாடு விதிக்கப்பட இருக்கும் ஜனவரி 1 முதல் 15-ந் தேதி வரையில் டெல்லி மாநிலத்துக்குட்பட்ட பகுதிகளில் இயங்கும் அனைத்து பள்ளிகளுக்கும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. எனினும், இந்த விதியில் இருந்து விஐபிக்களுக்கு விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. இதற்கு சோனியாவின் மருமகனும் பிரபல தொழிலதிபருமான ராபர்ட் வதேரா எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் தனது பேஸ்புக்கில் கூறியிருப்பதாவது:
ஒற்றை வரிசை, இரட்டை வரிசை முறைகள் அறிமுகமாகியுள்ளன. இதில் சிலருக்கு மட்டும் விதிவிலக்கு அளிப்பது முற்றிலும் தவறான செயலாகும். மக்கள் நலனுக்காக ஒரு சட்டம் அமல்படுத்தப்பட்டால் அது நம் எல்லோருக்கும் பொருந்தும். விஐபி என்பதெல்லாம் கிடையாது என்று வத்ராவின் பதிவில் கூறப்பட்டுள்ளது.
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது












Click it and Unblock the Notifications