ஸ்மிருதி இராணிக்கு பிடித்த ‘கை’ முறுக்கு பிரசாரம்: வானதி சீனிவாசன்

Subscribe to Oneindia Tamil

அமேதி: மாநிலப் பொதுச்செயலாளர் வானதி சீனிவாசன், பாஜக மகளிரணித் தலைவர் ஸ்மிருதி இராணி போட்டியிடும் அமேதி தொகுதியில் மூன்று நாள்களாக பிரசாரம் மேற்கொண்டு வருகிறார்.

காங்கிரஸ் கட்சியின் துணைத் தலைவர் ராகுல், உத்தர பிரதேச மாநிலத்தில் உள்ள, அமேதி தொகுதியில் போட்டியிடுகிறார். அவரை எதிர்த்து, பாஜக சார்பில், "டிவி' நடிகை ஸ்மிருதி இராணி வேட்பாளராக களம் இறக்கப்பட்டுள்ளார்.

உள்ளூர் தலைவர்கள் மட்டுமல்லாது தமிழ்நாட்டில் இருந்து பாஜக தலைவர்களும் பிரசாரத்திற்காக அமேதி சென்றுள்ளனர்.

வானதி சீனிவாசன்

வானதி சீனிவாசன்

சென்னையில் இருந்து, தமிழக பா.ஜ.க பொதுச் செயலர் வானதி சீனிவாசன். இரண்டு நாட்கள், அமேதி தொகுதியில், ஸ்மிருதியுடன் வலம் வந்து ஆதரவு திரட்டினார்.

ராணிக்கு பிடித்த ‘கை’ முறுக்கு

ராணிக்கு பிடித்த ‘கை’ முறுக்கு

அமேதி புறப்படுவதற்கு முன், ஸ்மிருதிக்கு மிகவும் பிடித்தமான, கை முறுக்குகளை நிறைய வாங்கிச் சென்றுள்ளார் வானதி.

தமிழ்நாட்டு ஸ்பெஷல்

தமிழ்நாட்டு ஸ்பெஷல்

தமிழகத்திற்கு ஸ்மிருதி வரும்போதெல்லாம், வானதியை சந்திப்பது வழக்கம். அப்போது தான், கை முறுக்கு என்றால், ஸ்மிருதிக்கு உயிர் என்பதை தெரிந்து கொண்டார். எனவேதான் இப்போது கை முறுக்கோடு பிரசாரம் கிளம்பிவிட்டார் வானதி.

ரசம் கூட பிடிக்குமாம்

ரசம் கூட பிடிக்குமாம்

முறுக்கு தவிர சென்னையில் உள்ள பிரபல ஓட்டலில் பரிமாறப்படும் ரசமும், ஸ்மிருதிக்கு பிடித்த "ஐயிட்டம்'மாம். ரசத்தை பார்சல் செய்ய முடியாது என்பதால், கை முறுக்கு வகைகளை, நிறைய வாங்கிச் சென்றுள்ளார் வானதி.

முறுக்கு டேஸ்ட் சூப்பர்

முறுக்கு டேஸ்ட் சூப்பர்

முறுக்கோடு அமேதி போன வானதியை உற்சாகமாக வரவேற்றுள்ளார் ஸ்மிருதி. ‘கை' முறுக்குகளை ஒரு கை பார்த்து விட்டு தான், பிரசாரத்திற்கே கிளம்பினாராம் ஸ்மிருதி இராணி.

வெகுளி மக்கள்

வெகுளி மக்கள்

தனது பிரசார அனுபவம் பற்றி ஃபேஸ்புக் பக்கத்தில் பகிர்ந்துள்ளார் வானதி சீனிவாசன். அமேதி தொகுதி மக்கள்.வெகுளிகள். மூன்று தலைமுறையாக காந்தி குடும்பத்தை தாண்டி யோசிக்கத் தெரியாதவர்கள்.முதல் முறையாக மோடியைப் பற்றி பேசுகிறார்கள் என்று கூறியுள்ளார்.

அமேதியில் மின்சாரமில்லையே

அமேதியில் மின்சாரமில்லையே

அதிகபட்சம் ஆறு மணி நேரம் தான் மின்சாரம் இருக்கிறது. அதுவும் எப்போது வரும் என்பது தெரியாது என்கிறார். மக்களின் வாழ்வாதாரம் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளது. தேர்தல் அலுவலகம் திறக்க, மின்சாரத்தை எதிர்பார்த்து, ஊர் மக்களுடன் காத்திருந்தோம் என்று கூறியுள்ளார்.

மோடி பிரதமராவார்

மோடி பிரதமராவார்

மோடி பிரதமரானால், தங்களது வாழ்க்கையில் முன்னேற்றம் வரும் என்ற நம்பிக்கையில் ராகுலின் தொகுதி மக்கள் காத்திருக்கிறார்கள்

ஸ்மிருதிக்கு வாக்களிப்பதின் மூலமாக, தங்களது கோபத்தை வெளிப்படுத்த மக்கள் காத்துக் கொண்டிருக்கிறார்கள் என்றும் கூறியுள்ளார் வானதி சீனிவாசன்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+