உ.பி. ஞானவாபி மசூதியில் தொல்லியல் ஆய்வுக்கு ஜூலை 26 வரை உச்சநீதிமன்றம் அதிரடி தடை!
வாரணாசி: உத்தரப்பிரதேச மாநிலம் வாரணாசியில் உள்ள சர்ச்சைக்குரிய ஞானவாபி மசூதியில் தொல்லியல் துறை வல்லுநர்கள் ஜூலை 26-ந் தேதி வரை அகழாய்வு நடத்துவதற்கு உச்சநீதிமன்றம் இன்று அதிரடியாக தடை விதித்தது.
உ.பி. வாரணாசி காசி விஸ்வநாதர் ஆலயத்தின் பகுதியிலேயே ஞானவாபி மசூதி அமைந்துள்ளது. காசி விஸ்வநாதர் ஆலயத்தின் ஒரு பகுதி இடிக்கப்பட்டுதான் மசூதி கட்டப்பட்டதாகவும் கூறப்படுகிறது. இது தொடர்பாக பல்வேறு வழக்குகள் நீதிமன்றங்களில் நிலுவையில் உள்ளன.

வாரணாசி கோர்ட் உத்தரவு: இதில் ஒன்று காசி விஸ்வநாதர் கோவில் மீதுதான் மசூதி கட்டப்பட்டுள்ளதா? என்பதை தொல்லியல் துறை ஆய்வு செய்ய வேண்டும் என்பதும். வாரணாசி நீதிமன்றத்தில் இது தொடர்பான வழக்கு தொடரப்பட்டிருந்தது. இந்த வழக்கை விசாரித்த வாரணாசி நீதிமன்றம், ஞானவாபி மசூதியில் தொல்லியல் துறையினர் ஆய்வு நடத்தி ஆகஸ்ட் 4-ந் தேதிக்குள் அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டிருந்தது.

தொல்லியல் ஆய்வு: இதனடிப்படையில் ஞானவாபி மசூதிக்கு நேற்று தொல்லியல் துறை வல்லுநர்கள் குழு சென்றது. அங்கு மசூதியை பார்வையிட்ட பின்னர் இன்று முதல் தொல்லியல் துறை ஆய்வு தொடங்கும் என தெரிவித்தனர். இன்று காலை 7 மணி முதல் ஞானவாபி மசூதியில் தொல்லியல் துறை வல்லுநர்கள் ஆய்வு நடத்த தொடங்கினர். அப்போது பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.
உச்சநீதிமன்றம் தடை: இதனையடுத்து இந்த ஆய்வுக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் முறையீடு செய்யப்பட்டது. அப்போது ஆஜரான சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா, வாரணாசி நீதிமன்றத்தின் உத்தரவுப்படி தொல்லியல் அதிகாரிகள் புகைப்படம் எடுத்தல், கட்டிட அளவீட்டு பணிகளை மேற்கொண்டிருக்கின்றனர். ஒரு செங்கல்லை கூட பெயர்க்கவும் இல்லை என்றார். இதனையடுத்து ஞானவாபி மசூதியில் தொல்லியல் ஆய்வு நடத்த வாரணாசி நீதிமன்றம் அனுமதி அளித்த உத்தரவுக்கு ஜூலை 26-ந் தேதி வரை இடைக்கால தடை விதித்து உச்சநீதிமன்ற நீதிபதிகள் உத்தரவிட்டனர். மேலும் மனுதாரர்கள் விருப்பப்பட்டால் அலகாபாத் உயர்நீதிமன்றத்தை அணுகலாம் எனவும் உச்சநிதிமன்ற நீதிபதிகள் அறிவுறுத்தினர்.
-
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
1 சவரன் தங்க நகை வாங்க போறீங்களா? கடைக்காரர் போடும் கணக்கில் அதிக மாற்றமா? ஏமாறாமல் இருக்க பில் தேவை -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு? -
அதை சொல்ல யாருக்கும் அருகதை இல்லை.. வீட்டிலும், ஆபீஸிலும் இதுதான் நடக்குது செல்வராகவன் ஆதங்கம் -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
48 அவுட் ஆஃப் 234! திமுக கூட்டணியில் இதுவரை எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை சீட் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000! -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
நாகர்கோவில் எம்எல்ஏ காந்திக்கு கல்தா.. பாஜக தலைமை முடிவால் கலக்கம்












Click it and Unblock the Notifications