மோடி பிரதமராக உண்ணாவிரதம் இருந்த கிராமத் தலைவர்- முடித்து வைத்தார் மோடி சகோதரர்!!
Subscribe to Oneindia Tamil
லக்னோ: குஜராத் முதல்வர் நரேந்திர மோடி நாட்டின் பிரதமராவதற்காக வாரணாசி அருகே உள்ள கிராமம் ஒன்றின் தலைவர் மேற்கொண்ட உண்ணாவிரதத்தை மோடி சகோதரர் சோமாபாய் மோடி இனிப்பு கொடுத்து முடித்து வைத்தார்.
உத்தரப்பிரதேச மாநிலத்தின் வாரணாசி புறநகர் கிராமம் ஒன்றின் தலைவர், மோடி பிரதமராகும் வரை தண்ணீரும் சாப்பாடும் எடுக்காமல் உண்ணாவிரதத்தை மேற்கொண்டு வந்தார். இந்த விவரம் சமூக வலைதளங்களிலும் பதிவானது.
இது குஜராத் மாநில எம்.எல்.ஏவும் பாஜக பொதுச்செயலருமான சக்கரபாய் சவுத்ரியின் கவனத்துக்கு கொண்டு செல்லப்பட்டது. இதைத் தொடர்ந்து வாரணாசியில் ,சுற்றுப் பயணம் மேற்கொண்டு இருக்கும் மோடியின் அண்ணன் சோமாபாய் மோடி உண்ணாவிரதம் இருந்து வரும் கிராமத்தின் தலைவரை நேரில் சந்தித்து பேசினார்.
பின்னர் சோமாபாய் மோடி மேட்டுக் கொண்டதன்பேரில் உண்ணாவிரத்தை அவர் முடித்துக் கொண்டார்.












Click it and Unblock the Notifications