அவையை முடக்கும் எம்.பிக்கள் மீது கோபம்.. இரவு விருந்தை அதிரடியாக ரத்து செய்த வெங்கையா நாயுடு
ராஜ்யசபா எம்பிக்களுக்கு அளிக்கவிருந்த விருந்தை வெங்கையா நாயுடு ரத்து செய்தார்.
Subscribe to Oneindia Tamil
டெல்லி: ராஜ்யசபா எம்பிக்களுக்கு நாளை அளிக்கவிருந்த விருந்தை வெங்கையா நாயுடு ரத்து செய்தார்.
ராஜ்யசபா எம்பிக்களுக்கு மார்ச் 21-ஆம் தேதி இரவு விருந்து கொடுக்க jராஜ்யசபா தலைவரான, துணை குடியரசு தலைவர், வெங்கையா நாயுடு விரும்பினார். அதற்கான ஏற்பாடுகளை கடந்த வாரமே செய்துவிட்டார். எம்.பிக்கள் தவிர, குடியரசுத் தலைவர், பிரதமர், எதிர்க்கட்சித் தலைவர், ஆகியோருக்கும் இந்த விருந்து வழங்கப்படும் என கூறப்பட்டது.

இந்நிலையில் கடந்த சில நாட்களாக நாடாளுமன்றத்தின் இரு அவைகளும் அதிமுக, தெலுங்கு தேசம் உள்ளிட்ட கட்சி எம்.பிக்கள் அமளியால் முடங்கியது.
ஆனால் தொடர்ந்து இன்றும் அவை முடக்கப்பட்டதால் அதிருப்தி அடைந்தார் வெங்கையா. இதனால் நாளை நடக்கவிருந்த விருந்து நிகழ்ச்சியை ரத்து செய்துவிட்டார்.












Click it and Unblock the Notifications