Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

"பெருமாள்" ஜம்முவுக்கு வர போகிறார்.. வடமாநில மக்களுக்கு செம குஷி.. திருப்பதி வரை போகவே வேணாம்..!

ஜம்முவில் பெருமாள் கோயிலுக்கான பூமி பூஜை நடந்தது

Subscribe to Oneindia Tamil

ஜம்மு: "இனிமேல் பெருமாளை தரிசிக்க வடமாநில மக்கள், திருப்பதி வரை போகவே வேணாம்.. ஜம்முவிலேயே வெங்கடேச பெருமாள் வர போகிறார்.. இதற்கான கோயில் கட்டப்படும் நிலத்தில் பூமி பூஜையும் சிறப்பாக நடந்து முடிந்துவிட்டது... விரைவில் இந்த கோயிலும் திறக்கப்பட்டுவிடும்..!

ஜம்மு என்றாலே அமர்நாத் கோயிலும், வைஷ்ணவி தேவி கோயிலும் தான் ஃபேமஸ்.. ஜம்முவில் மட்டுமல்ல, வடமாநிலங்களுக்கே இந்த கோயில்கள்தான் சிறப்பை தந்து வருகின்றன.

இந்நிலையில், பெருமாள் கோயில் ஒன்றை ஜம்முவில் நிறுவலாம் என்று திருப்பதி தேவஸ்தானம் முடிவு செய்தது.. அதன்படி, மஜீன் என்ற கிராமத்தில் இந்த கோயிலை கட்டுவதற்காக, 62.06 ஏக்கர் நிலத்தை காஷ்மீர் அரசு 40 வருஷங்களுக்கு முன்பே குத்தகைக்கு வழங்கியிருக்கிறது.

வசதிகள்

வசதிகள்

இந்த இடத்தில்தான், பிரம்மாண்டமான வெங்கடேச பெருமாள் கோயில் கட்ட முடிவானது.. வெறும் கோயில் மட்டுமல்லாமல், அங்கு வந்து செல்லும் பக்தர்களுக்கான வசதிகள், கோயில் ஊழியர்களுக்கு தங்கும் வசதிகள், வேத பாடசாலைகள், ஆன்மீக, தியான மய்யங்கள், வண்டிகள் நிறுத்துவதற்கான இடங்கள் என தனித்தனியாக கட்டவும் திட்டங்கள் தயாராக உள்ளது.

நிலம்

நிலம்

கோயில் கட்டப்படும் இந்த நிலத்தில்தான் பூமி பூஜை தற்போது சிறப்பாக நடந்து முடிந்துள்ளது.. இதற்கான அடிக்கல் நாட்டு விழாவும் நடந்தது.. காஷ்மீர் துணைநிலை ஆளுநர் மனோஜ் சின்ஹா, மத்திய அமைச்சர்கள் கிஷன் ரெட்டி, ஜிதேந்திர சிங், திருப்பதி தேவஸ்தான தலைவர் ஒய்வி சுப்பா ரெட்டி உள்ளிட்ட பலரும் இந்த பூமி பூஜையில் கலந்து கொண்டனர்.

அடிக்கல்

அடிக்கல்

அம்மாநில துணைநிலை ஆளுநர் மனோஜ் சின்ஹா, பேசும்போது, ஸ்ரீ வெங்கடேஸ்வரா கோயில் கட்டுமான பணி எப்போது ஆரம்பிக்கும் என்று வட இந்திய மக்கள் பெரிதும் ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருந்தனர்.. ஒருவழியாக மாதா வைஷ்ணவி தேவி மண்ணிலேயே ஏழுமலையான் கோயிலும் அமைய போகிறது.. இதன்மூலம் வடமாநில மக்களின் நீண்டநாள் கனவு நிறைவேறி இருக்கிறது... காஷ்மீருக்கு வரலாற்று சிறப்புமிக்க நாள் இது.. வெங்கடேஸ்வரா கோயில் கட்டி முடிக்கப்பட்ட பிறகு ஆன்மீக தலமாக உருவெடுக்கும். இங்கு பணியாற்றும் பூசாரிகள், சூப்பர்வைசர் போன்றோரும் இங்கு உள்ளூர் மக்களாகவே கருதப்படுவர்" என்றார்.

 சுற்றுலா துறை

சுற்றுலா துறை

பெருமாள் கோயில் தங்கள் மாநிலத்திலேயே வர உள்ளதால் ஜம்மு மக்கள் மகிழ்ச்சியில் உள்ளனர்.. இந்த கோயிலை கட்டுவதற்கு இன்னொரு முக்கிய காரணம், இதனால் ஜம்முவில் சுற்றுலாத்துறையும் வளர்ச்சி அடையும், அதனால் உள்ளூர் மக்களுக்கும் வேலைவாய்ப்பு கிடைக்கும் என்று நம்பப்படுகிறது.. ஆக மொத்தம் பெருமாளை தரிசிக்க, திருப்பதி வரை வடமாநில மக்கள் இனி செல்லவே தேவையில்லை..!

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+