மூத்த காங். தலைவர் எஸ்.எம். கிருஷ்ணா தீவிர அரசியலில் இருந்து ஓய்வு
காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் எஸ்.எம். கிருஷ்ணா தீவிர அரசியலில் இருந்து ஓய்வு பெற முடிவெடுத்துள்ளாராம்.
Subscribe to Oneindia Tamil
பெங்களூரு: கர்நாடகா முன்னாள் முதல்வரும் முன்னாள் மத்திய அமைச்சருமான எஸ்.எம். கிருஷ்ணா தீவிர அரசியலில் இருந்து ஓய்வு பெற உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
கர்நாடகா காங்கிரஸில் அண்மைக்காலமாக எஸ்.எம். கிருஷ்ணா ஓரம்கட்டப்பட்டு வருகிறார். இதனால் அவர் கடும் அதிருப்தி அடைந்திருந்தார்.

இதனால் தீவிர அரசியலில் இருந்து ஓய்வு பெற எஸ்.எம். கிருஷ்ணா முடிவெடுத்துள்ளார் என தகவல்கள் தெரிவிக்கின்றன.
காங்கிரஸ் தலைவர் சோனியா காந்திக்கு அனுப்பி வைத்துள்ள கடிதத்தில் தம்மை கட்சியின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பில் இருந்து விடுவிக்குமாறு கேட்டுக் கொண்டுள்ளார்.












Click it and Unblock the Notifications