தலைவணங்காத எழுத்தாளன்! மேடையில் முதல்வர் பினராயி விஜயன் இருக்கும்போதே அவரை கண்டித்த எம்.டி.வாசுதேவன்
திருவனந்தபுரம்: மூத்த மலையாள எழுத்தாளர் எம்.டி.வாசுதேவன் நாயர் நேற்று (டிசம்பர் 25) இரவு தனது 91 வயதில் காலமானார். எந்த அதிகார பீடத்தின் முன்பும் தலைவணங்காத எழுத்துக்காரன் என போற்றப்படுபவர் எம்.டி.வாசுதேவன் நாயர். தனக்கு நடந்த பாராட்டு விழாவிலேயே, கேரள முதலமைச்சர் பினராயி விஜயனை எம்.டி.வாசுதேவன் நாயர் கண்டித்துப் பேசிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது குறிப்பிடத்தக்கது.
கடந்த சில நாட்களுக்கு முன்பு கடும் நெஞ்சு வலி காரணமாக கோழிக்கோட்டில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட எம்.டி. வாசுதேவன் நாயருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இந்நிலையில், புதன்கிழமை இரவு, எம்.டி வாசுதேவன் நாயர் சிகிச்சை பலனின்றி காலமானார். அவரது இறுதிச் சடங்குகள் இன்று, அதாவது வியாழக்கிழமை மாலை நடைபெறும் என்று அவரது குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.

மலையாள எழுத்துலகின் தலைமகன்களில் ஒருவராக கருதப்படுபவர் எம்.டி.வாசுதேவன் நாயர். மலையாள வாசகர்களால் அதிகமாக வாசிக்கப்படுபவரும் கூட. இந்தியாவில் இலக்கியத்துக்காக வழங்கப்படும் உயரிய விருதான ஞானபீடம் விருது பெற்றவர் எம்.டி வாசுதேவன் நாயர். 54 படங்களுக்கு திரைக்கதை எழுதியுள்ள எம்.டி வாசுதேவ, 7 படங்களை இயக்கியும் உள்ளார். மேலும் சிறந்த திரைக்கதைக்காக 4 தேசிய விருதுகளை வென்றுள்ளார். வாசுதேவன் நாயரின் மறைவுக்கு திரையுலக பிரபலங்கள், இலக்கியவாதிகள், வாசகர்கள் என பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
எம்.டி.வாசுதேவன் நாயரின் மறைவுக்கு இரங்கல் தெரிவித்துள்ள தமிழின் முன்னணி எழுத்தாளர் ஜெயமோகன், "மலையாள எழுத்தாளர் என்னும் ஆளுமையின் வெளிப்பாடு எம்.டி. வாசுதேவன் நாயர். எந்த அரசியல்வாதி முன்னரும், எந்த அதிகாரபீடம் முன்பிலும் அவர் ஒரு கணமும் வணங்கியதில்லை. அவர்கள் தன்னை வணங்கவேண்டும் என எண்ணுபவராகவே நீடித்தார். எம்டியின் 'ஆணவம்' புகழ்பெற்றது.
சென்ற ஆண்டு அவருடைய 90 ஆவது ஆண்டுவிழாவை கேரள அரசு ஒரு மாநில விழாவாகவே கொண்டாடியது. பள்ளிகள் தோறும் அவருடைய பிறந்தநாள் கொண்டாடப்பட்டது. ஆனால் அந்த விழாவிலேயே முதல்வரின் ஆடம்பரத்தை வெளிப்படையாகக் கண்டிக்க அவர் தயங்கவில்லை. ஆனால் அதே எம்.டி மூத்த படைப்பாளிகள், கதகளி கலைஞர்களின் கால்தொட்டு வணங்கும் பணிவு கொண்டவராகவும் நீடித்தார். எழுத்தாளனுக்குரிய நிமிர்வு மட்டுமே கொண்டு ஒவ்வொரு கணமும் வாழ்ந்தவர், வெற்றிகளையும் சாதனைகளையும் மிக இயல்பாக நிகழ்த்தி முன்சென்றவர்." என புகழாரம் சூட்டியுள்ளார்.
ஜெயமோகன் குறிப்பிட்டுள்ள அந்தச் சம்பவம் கடந்த ஆண்டு கேரள அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது. கோழிக்கோட்டில் கேரள முதல்வர் பினராயி விஜயன் பங்கேற்ற விழாவில் அவரை மேடையில் வைத்துக்கொண்டே பேசிய எழுத்தாளர் எம்.டி. வாசுதேவன் நாயர், அரசியல் இப்போது அதிகாரத்தை அடைவதற்கான பாலமாக உள்ளது. இங்குள்ள சில தலைவர்கள் தங்கள் தவறுகளை ஒப்புக்கொள்ளக்கூட தயங்குகிறார்கள், தனிமனித துதிபாடலை ரசிக்கிறார்கள், சர்வாதிகாரிகளாக இருக்கிறார்கள் என விமர்சித்தார்.
எம்.டி வாசுதேவன் நாயர் பேசி முடித்ததுமே, முதல்வர் பினராயி விஜயன் மேடையில் இருந்து எழுந்து சென்றார். எம்.டி.வாசுதேவன் நாயர், பினராயி விஜயனைத்தான் மறைமுகமாக விமர்சித்ததாக விவாதங்கள் எழுந்தன. இந்த சம்பவம் அப்போது கேரள தலைப்புச் செய்திகளில் இடம்பிடித்தது. மார்க்சிஸ்ட் தலைவர்கள் எம்.டி.வாசுதேவன் நாயர் எங்களுக்கு பாடம் எடுக்க வேண்டாம் என பதிலடி கொடுத்திருந்தனர்.
-
சொத்து வைத்திருப்போர் கவனத்திற்கு! ஏப்.1 முதல் பத்திரப்பதிவில் பெரிய மாற்றம்.. இனி நிலம் இந்த விலை? -
கேஸ் சிலிண்டர் விலை மாறுது! ஏப்.1 முதல் புதிய விலை! இல்லத்தரசிகள் மாத பட்ஜெட்டில் என்ன தாக்கம்? -
H-1B விசா கட்டுப்பாடுகள் நீக்கம்.. அமெரிக்காவில் முக்கிய மசோதா.. இதுதான் இந்தியர்களுக்கு நல்ல செய்தி -
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்? -
தங்கம்.. 'தரை' தட்டியது ஏன்? கூடை கூடையாக மார்க்கெட்டில் விற்ற அரபு நாடுகள்.. ஒரு ராட்சனின் வீழ்ச்சி -
வளைகுடா வளையம்: ஈரானிடம் இந்தியா வைத்த 'செக்'.. தவிப்பில் கச்சா எண்ணெய்! டெல்லி மெகா முடிவு -
திமுக வேட்பாளர் நேர்காணலில் பங்கேற்ற துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின்.. என்ன கேட்கப்பட்டது என விளக்கம் -
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
டிராகனின் வெள்ளி வேட்டை.. சீனாவைச் சுழற்றியடிக்கும் சில்வர் ஜுரம்.. வெள்ளி இனி குட்டித்தங்கம்.. ஏன்? -
முதல் விக்கெட்.. திமுக கூட்டணியில் விலகிய தமிழக வாழ்வுரிமை கட்சி.. அறிவித்தார் வேல்முருகன் -
Siragadikka Aasai Promo: விஜயாவுக்கு எதிராக ஆதாரத்தை கண்டுபிடித்த முத்து- மீனா.. சிந்தாமணிக்கு ஆப்பு! செம சம்பவம் -
நன்றியய்யா நன்றி.. ஓட்டல் ஓனர்கள் வயிற்றில் பால் வார்த்த அறிவிப்பு! இனி சிலிண்டர் தட்டுப்பாடு இல்லை!












Click it and Unblock the Notifications