மும்பை ரயில் நிலையத்தில் பதைபதைப்பு.. மோதி தள்ளி மேலே ஓடிய ரயில்.. அதிசயமாக தப்பிய பெண்- வீடியோ
மும்பை: இளம் பெண்ணை ரயில் முட்டி, மோதி தூக்கி வீசியபோதிலும், நடுவே படுத்ததால் உயிர் தப்பியுள்ள அதிசய சம்பவம் மும்பையில் நடைபெற்றுள்ளது.
மும்பையின் ஒரு ரயில் நிலையத்தில் இரு நாட்கள் முன்பு நடைபெற்ற இச்சம்பவம் குறித்த சிசிடிவி வீடியோ காட்சிகள் தற்போது வெளியாகியுள்ளன. ஒரு இளம் பெண் ரயில் வரும் நிலையில், தண்டவாளத்தின் குறுக்கே வருகிறார். இதைப் பார்த்த சக பயணிகள் கத்தி கூச்சலிடுகிறார்கள். ஆனால் அந்த பெண்ணோ தண்டவாளத்தின் நடுவே ஓடிச் சென்று நின்று விடுகிறார்.

அப்போது வேகத்தை குறைந்தபடி ரயில் வந்தாலும் கூட முட்டிய வேகத்தில் அவர் குப்புற கீழே விழுகிறார். ரயில் மேலே நகர்ந்து செல்கிறது. இதில் ஆச்சரியம் என்னவென்றால் விழுந்த வேகத்தில் பட்ட அடிதானே தவிர, ரயில் ஏறி அவரது உடலில் காயமில்லை. உயிரோடு தப்பினார் அந்த பெண். ரயிலின் நடு பகுதியில் படுத்துக்கொண்டதால் சக்கரம் ஏறுவதில் இருந்து அந்த பெண் தப்பியுள்ளார். அவர் தற்கொலைக்கு முயன்றபோதிலும், அவரின் நல்ல நேரம் அவரை காப்பாற்றிவிட்டதாக கூறப்படுகிறது.
#WATCH Dramatic visuals: Girl survives after being run over by a train in Mumbai pic.twitter.com/C5ZYf84CL9
— ANI (@ANI_news) June 7, 2017
அந்த பரபரப்பு வீடியோவை பாருங்கள்.












Click it and Unblock the Notifications