த்தூ...என காறி துப்பிய விவகாரம்...பிரஸ் கவுன்சிலில் விஜயகாந்த் தரப்பில் விளக்கம் #vijayakanth

Subscribe to Oneindia Tamil

டெல்லி: பத்திரிகையாளர்களிடம் அநாகரிகமாக நடந்து கொண்டது குறித்து இந்திய பிரஸ் கவுன்சிலில் தேமுதிக தலைவர் விஜயகாந்த் தரப்பில் இன்று நேரில் விளக்கம் அளிக்கப்பட்டது.

விஜயகாந்துக்கும் பத்திரிகையாளர்களுக்கும் ஏழாம் பொருத்தம் எப்பவுமே.. சென்னை விமான நிலையத்தில் பத்திரிகையாளர் ஒருவரை விஜயகாந்த் தாக்கினார்.

த்தூ.......

டெல்லியில், தூக்கி அடிச்சுடுவேன் பார்த்துக்க... என்றார்... மற்றொரு முறை நாயே என திட்டினார். உச்சகட்டமாக செய்தியாளர்களிடம் பேசிக் கொண்டிருந்த போது நிதானமிழந்து 'த்தூ.....' என காறி உமிழ்ந்தார்.

பிரஸ் கவுன்சிலுக்கு புகார்

பிரஸ் கவுன்சிலுக்கு புகார்

விஜயகாந்தின் இந்த அநாகரி செயல்கள் தொடர்பாக இந்திய பிரஸ் கவுன்சி0லுக்கு புகார் மனுக்கள் அனுப்பி வைக்கப்பட்டன. இதனை விசாரித்த பிரஸ் கவுன்சில் விஜயகாந்த் தன்னுடைய நடவடிக்கைகளுக்கு விளக்கம் தர நோட்டீஸ் அனுப்பியது.

நோட்டீஸ்

நோட்டீஸ்

கடந்த ஜூலை மாதம் 4 வாரங்களுக்குள் விஜயகாந்த் விளக்கம் தர வேண்டும் என்று பிரஸ் கவுன்சில் இந்த நோட்டீஸை அனுப்பியது. அப்போது மேலும் ஒரு வார கால அவகாசம் விஜயகாந்த் தரப்பில் கோரப்பட்டது.

விளக்கம்

விளக்கம்

இந்த நிலையில் இதற்கு இன்று விஜயகாந்த் தரப்பில் பிரஸ் கவுன்சிலில் நேரில் விளக்கம் அளிக்கப்பட்டது. டெல்லி மாநில தேமுதிக செயலர் மணி, விஜயகாந்த் சார்பாக பிரஸ் கவுன்சிலில் ஆஜரானார். அப்போது பத்திரிகையாளர்களிடம் விஜயகாந்த் அநாகரீகமாக நடந்தது குறித்து மணி விளக்கம் அளித்தார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+