வாஜ்பாய் மறைவு: அதிர்ச்சியும், மன வேதனையும் அடைந்தேன்.. விஜயகாந்த் இரங்கல்
முன்னாள் பிரதமர் வாஜ்பாய் மறைவிற்கு தேமுதிக தலைவர் விஜயகாந்த் இரங்கல் தெரிவித்துள்ளார்.
Recommended Video
டெல்லி: முன்னாள் பிரதமர் வாஜ்பாய் மறைவிற்கு தேமுதிக தலைவர் விஜயகாந்த் இரங்கல் தெரிவித்துள்ளார்.
முன்னாள் பிரதமர் வாஜ்பாய் மரணம் அடைந்துள்ளார். பாஜகவின் முக்கிய தலைவரான இவர் 93 வயதில் மரணம் அடைந்துள்ளார். அவர் உடல் நலக்குறைவு காரணமாக மரணம் அடைந்தார்.
டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த அவர் சிகிச்சை பலனின்றி மரணம் அடைந்துள்ளார்.
அவரது மறைவிற்கு தலைவர்கள் இரங்கல் தெரிவித்து வருகிறார்கள்.
அவரது மறைவிற்கு தேமுதிக தலைவர் விஜயகாந்த் இரங்கல் தெரிவித்துள்ளார். அதில், முன்னாள் இந்திய பிரதமர் அடல் பிகாரி வாஜ்பாய் அவர்கள், உடல்நலக்குறைவால் எய்ம்ஸ் மருத்துவமனையில் காலமானார் என்ற செய்தி கேட்டு மிகவும் அதிர்ச்சியும், மன வேதனையும் அடைந்தேன். அனைத்துக் கட்சியினராலும் பாராட்டப்பட்ட முக்கியமான பாஜக தலைவர், திரு.வாஜ்பாய் அவர்கள்
பொக்ரான் அணு குண்டு சோதனை, கார்கில் போர் ஆகியவற்றில் வெற்றிகண்ட.திரு.வாஜ்பாய் அவர்களை, பிரிந்துவாடும் அவரது குடும்பத்திற்கும்,பாஜக கட்சியினருக்கும், நண்பர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்கின்றேன். அவருடைய ஆன்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறேன், என்று வருத்தத்துடன் தெரிவித்துள்ளார்.