வன்முறைகளுக்கு காரணமே ஆண்களே தான்... மத்திய அமைச்சர் மேனகா காந்தி குற்றச்சாட்டு
டெல்லி : நாட்டில் நடக்கும் அனைத்து வன்முறைகளுக்கும் காரணம் ஆண்கள் தான் என மத்திய குழந்தைகள் மற்றும் பெண்கள் நலத்துறை அமைச்சர் மேனகா கூறியுள்ளார்.
பேஸ்புக் மூலம் கலந்துரையாடி, சமூகத்திற்கு சேவை செய்த 100 சிறந்த மகளிரைத் தேர்வு செய்யும் திட்டத்தை மத்திய அரசு துவக்கி உள்ளது. இதன் ஒரு கட்டமாக பேஸ்புக் மூலம் பொதுமக்களை நேரடியாக சந்தித்து அவர்கள் கேள்விகளுக்கு மேனகா காந்தி பதில் அளித்தார்.

அப்போது அவர் கூறியதாவது... அனைத்து வன்முறைகளுக்கும் ஆண்கள் தான் காரணமாக இருக்கின்றனர். சவுதி அரேபிய தூதரக அதிகாரியால் நேபாள பெண்கள் பலாத்காரம் செய்யப்பட்டதைப் பார்க்கும்போது, எதிர்காலத்தில் பெண்களுக்கு என்ன மாதிரியான பாதுகாப்புகளை தர வேண்டும் அரசு யோசிக்கிறது.
வீட்டு வேலை செய்யும் பெண்களுக்கு எதிரான வன்முறை சட்டம் 2015ன் கீழ், என்னவெல்லாம் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன என மாநில அரசுகளிடம் அறிக்கை கேட்டுள்ளோம். வெளிநாடுளை விட, இந்தியாவில் தான் பெண்களைப் பற்றிய செய்திகளை மீடியாக்கள் அதிகம் ஒளிபரப்புகின்றன. இவ்வாறு அவர் கூறினார்.












Click it and Unblock the Notifications