மே.வங்கத்திலும் வெடித்தது குடியுரிமை சட்ட எதிர்ப்பு போராட்டங்கள்- வன்முறையை தவிர்க்க மமதா வேண்டுகோள்
கொல்கத்தா: வடகிழக்கு மாநிலங்களைத் தொடர்ந்து மேற்கு வங்கத்திலும் குடியுரிமை சட்ட எதிர்ப்பு போராட்டங்கள் வெடித்துள்ளன.
மத்திய அரசின் குடியுரிமை சட்டத்துக்கு எதிராக வடகிழக்கு மாநிலங்கள் பற்றி எரிகின்றன. அம்மாநிலங்களில் துணை ராணுவம் குவிக்கப்பட்டு வன்முறைகள் கட்டுப்படுத்தப்பட்டு வருகின்றன.
அஸ்ஸாமில் போராட்டங்களை தூண்டிவிட்டதாக 85 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். நூற்றுக்கணக்கானோர் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.

முதல்வர் சர்பானந்தா
இந்நிலையில் அஸ்ஸாம் முதல்வர் சர்பானந்தா சோனாவால், மாநில மக்களின் அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்படும். மக்கள் போராட்டங்களில் ஈடுபட வேண்டாம் என வேண்டுகோள் விடுத்துள்ளார்.

ஊரடங்கு உத்தரவு தளர்வு
மேலும் அஸ்ஸாமின் குவஹாத்தி, திப்ரூகர் மாவட்டங்களில் இன்று ஊரடங்கு உத்தரவு தளர்த்தப்பட்டுள்ளது. குவஹாத்தியில் இன்று காலை 7 மணி முதல் மாலை 4 மணிவரை ஊரடங்கு உத்தரவு தளர்த்தப்பட்டிருக்கிறது.
|
ரயில் நிலையங்கள் தீக்கிரை
தற்போது வடகிழக்கு மாநிலங்களைத் தொடர்ந்து மேற்கு வங்க மாநிலத்திலும் குடியுரிமை சட்டத்துக்கு எதிரான போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. சில இடங்களில் ரயில் நிலையங்கள் தீக்கிரையாகின. ரயில் பெட்டிகளும் எரிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.

மமதா பானர்ஜி அப்பீல்
மால்டாவில் நேற்று நடைபெற்ற போராட்டத்தில் பல்லாயிரக்கணக்கானோர் பங்கேற்றனர். இன்று நாடியா, வடக்கு 24 பர்ர்கானா, ஹவுரா மாவட்டங்களில் போராட்டங்கள் நடைபெறுகின்றன. இதனிடையே போராட்டங்களில் ஈடுபடுவோர் பொது சொத்துகளுக்கு சேதம் விளைவிக்கும் வன்முறைகளில் ஈடுபடக் கூடாது என அம்மாநில முதல்வர் மமதா பானர்ஜி கேட்டுக் கொண்டுள்ளார்.

உச்சநீதிமன்றத்தில் விசாரணை
அத்துடன் 60க்கும் மேற்பட்ட மனித உரிமை அமைப்புகள், சமூக இயக்கங்கள் டிச.19-ல் நாடு தழுவிய போராட்டத்துக்கு அழைப்பு விடுத்துள்ளன. இக்குடியுரிமை சட்டத்துக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் தொடரப்பட்ட பொதுநலன் மனுக்கள் மீது டிசம்பர் 18-ல் விசாரணை நடைபெற உள்ளது.

வெளிநாடுகள் அறிவுறுத்தல்
இப்போராட்டங்களால் வடகிழக்கு மாநிலங்களுக்கு பயணம் செய்ய வேண்டாம் என பல நாடுகள் தங்களது நாட்டவருக்கு அறிவுறுத்தல் விடுத்துள்ளன. அமெரிக்கா, இங்கிலாந்து, கனடா உள்ளிட்ட நாடுகள் இந்த அறிவுறுத்தலை வெளியிட்டுள்ளன.
-
கூட்டுறவு வங்கி தங்க நகை கடன் + மகளிர் உரிமை தொகை! கனிமொழி பிரம்மாஸ்திரம்! ஸ்டாலின் முக்கிய முடிவு -
தேசிய ஜனநாயக கூட்டணியில் விஜய்.. நெருங்கும் பேச்சுவார்த்தை.. ஒரே வார்த்தையில் உடைத்த சரத்குமார் -
அமெரிக்காவை அசரடித்த அம்பானி.. ரூ.27 லட்சம் கோடி முதலீடு செய்யும் ரிலையன்ஸ்.. டிரம்ப் அறிவிப்பு -
எங்க கொண்டு போய் விட்டுடுச்சி பாருங்க.. கேஸ் தட்டுப்பாட்டால், ஸ்விக்கி, ஜொமோட்டோ டெலிவரி குறைந்தது! -
7 பொதுத்தொகுதி + 2 தனித்தொகுதி.. அதிமுக கூட்டணியில் டிடிவிக்கு ஒதுக்கப்படும் தொகுதிகள் இதுதான்! -
அமெரிக்கா இனி பிக்பாஸ் இல்லை.. நீங்க நம்பலைனாலும் அதான் நெசம்.. ஐக்கிய அரபு சகாப்தமும் வீழ்ந்தது! -
பிரேமலதாவிற்கு திமுகவின் அடுத்த ‘சர்ப்ரைஸ்'.. தேமுதிகவிற்கு தாராளம் காட்டும் ஸ்டாலின்.. காங்கிரஸ்க்கு அடி -
3 கோடி பீப்பாய் கச்சா எண்ணெய்யை வாங்கி குவித்த இந்திய நிறுவனங்கள்! ரஷ்யாவுக்கு கொட்டும் பண மழை! -
இந்திய கப்பலுக்கு மட்டும் வழிவிட்ட ஈரான்.. ஹார்முஸ் ஜலசந்தியை கடந்து மும்பை வந்தடைந்த கப்பல் -
கடலில் இறக்கப்பட்ட கண்ணி வெடி! எக்குத்தப்பாய் வந்து சிக்கிய அமெரிக்கா! வால் ஸ்ட்ரீட் ஜர்னல் வார்னிங் -
ஒருவேளை உண்மையா இருக்குமோ.. என்டிஏ கூட்டணியில் விஜய்! மாஜி அமைச்சர் கடம்பூர் ராஜூ சொன்ன வார்த்தை! -
துணை முதல்வர் எல்லாம் ஜூனியர் ஆர்ட்டிஸ்ட் வேலை.. 2.5 வருஷம் முதல்வர் பதவி.. பாஜகவிடம் விஜய் டிமாண்ட்












Click it and Unblock the Notifications