மே.வங்கத்திலும் வெடித்தது குடியுரிமை சட்ட எதிர்ப்பு போராட்டங்கள்- வன்முறையை தவிர்க்க மமதா வேண்டுகோள்
கொல்கத்தா: வடகிழக்கு மாநிலங்களைத் தொடர்ந்து மேற்கு வங்கத்திலும் குடியுரிமை சட்ட எதிர்ப்பு போராட்டங்கள் வெடித்துள்ளன.
மத்திய அரசின் குடியுரிமை சட்டத்துக்கு எதிராக வடகிழக்கு மாநிலங்கள் பற்றி எரிகின்றன. அம்மாநிலங்களில் துணை ராணுவம் குவிக்கப்பட்டு வன்முறைகள் கட்டுப்படுத்தப்பட்டு வருகின்றன.
அஸ்ஸாமில் போராட்டங்களை தூண்டிவிட்டதாக 85 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். நூற்றுக்கணக்கானோர் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.

முதல்வர் சர்பானந்தா
இந்நிலையில் அஸ்ஸாம் முதல்வர் சர்பானந்தா சோனாவால், மாநில மக்களின் அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்படும். மக்கள் போராட்டங்களில் ஈடுபட வேண்டாம் என வேண்டுகோள் விடுத்துள்ளார்.

ஊரடங்கு உத்தரவு தளர்வு
மேலும் அஸ்ஸாமின் குவஹாத்தி, திப்ரூகர் மாவட்டங்களில் இன்று ஊரடங்கு உத்தரவு தளர்த்தப்பட்டுள்ளது. குவஹாத்தியில் இன்று காலை 7 மணி முதல் மாலை 4 மணிவரை ஊரடங்கு உத்தரவு தளர்த்தப்பட்டிருக்கிறது.
|
ரயில் நிலையங்கள் தீக்கிரை
தற்போது வடகிழக்கு மாநிலங்களைத் தொடர்ந்து மேற்கு வங்க மாநிலத்திலும் குடியுரிமை சட்டத்துக்கு எதிரான போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. சில இடங்களில் ரயில் நிலையங்கள் தீக்கிரையாகின. ரயில் பெட்டிகளும் எரிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.

மமதா பானர்ஜி அப்பீல்
மால்டாவில் நேற்று நடைபெற்ற போராட்டத்தில் பல்லாயிரக்கணக்கானோர் பங்கேற்றனர். இன்று நாடியா, வடக்கு 24 பர்ர்கானா, ஹவுரா மாவட்டங்களில் போராட்டங்கள் நடைபெறுகின்றன. இதனிடையே போராட்டங்களில் ஈடுபடுவோர் பொது சொத்துகளுக்கு சேதம் விளைவிக்கும் வன்முறைகளில் ஈடுபடக் கூடாது என அம்மாநில முதல்வர் மமதா பானர்ஜி கேட்டுக் கொண்டுள்ளார்.

உச்சநீதிமன்றத்தில் விசாரணை
அத்துடன் 60க்கும் மேற்பட்ட மனித உரிமை அமைப்புகள், சமூக இயக்கங்கள் டிச.19-ல் நாடு தழுவிய போராட்டத்துக்கு அழைப்பு விடுத்துள்ளன. இக்குடியுரிமை சட்டத்துக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் தொடரப்பட்ட பொதுநலன் மனுக்கள் மீது டிசம்பர் 18-ல் விசாரணை நடைபெற உள்ளது.

வெளிநாடுகள் அறிவுறுத்தல்
இப்போராட்டங்களால் வடகிழக்கு மாநிலங்களுக்கு பயணம் செய்ய வேண்டாம் என பல நாடுகள் தங்களது நாட்டவருக்கு அறிவுறுத்தல் விடுத்துள்ளன. அமெரிக்கா, இங்கிலாந்து, கனடா உள்ளிட்ட நாடுகள் இந்த அறிவுறுத்தலை வெளியிட்டுள்ளன.
-
பத்திரப்பதிவில் இன்று முதல் புதிய ரூல்ஸ்! அதிகரிக்கும் சொத்து பதிவு செலவு! கலங்கும் நடுத்தர மக்கள் -
அந்த பேச்சு பேசின ஆதவ் அர்ஜுனா.. வில்லிவாக்கம் சம்பவத்தில் வாய் திறக்கலயே! கப்சிப் தவெக! -
ஏப்ரல் 1ம் தேதியான இன்று சம்பளம், கடன் எதுவுமே சாத்தியமில்லை... மக்கள் அறிய வேண்டிய உண்மை -
தங்கத்தை இப்போது வாங்கலாமா? இல்லை கொஞ்சம் காத்திருக்கலாமா? ஒரே வரியில் ஆனந்த் சீனிவாசன் விளக்கம் -
அண்ணாமலை போட்ட கண்டிஷன்.. அதிர்ந்துபோன டெல்லி.. கோவை வடக்குத் தொகுதியில் எகிறும் எதிர்பார்ப்பு -
Gold Loan: தங்க நகைக் கடன் இனி இவ்வளவுதான்! ரிசர்வ் வங்கியின் புதிய விதிகள் இன்று முதல் அமல்! -
தவெக கூட்டத்தில் மதுபாட்டில் வீச்சு.. சிக்கிய 2 பேர்.. யார் இவர்கள்? போலீஸ் சொன்ன ஷாக் தகவல் -
கண் முன்னே வெடிக்கும் உலக போர்! வளைகுடா மோதலில் உள்ளே வரும் உலக நாடுகள்.. உச்சக்கட்ட பதற்றம் -
ஈரானின் புதிய சுப்ரீம் லீடரும் மரணம்? குழப்பத்தில் பொதுமக்கள்.. ரஷ்யா தரப்பு சொன்ன முக்கியமான தகவல் -
அதிமுக பாஜகவை தோற்கடிப்போம்.. அண்ணாமலையின் அன்பு கூட்டம் தடாலடி முடிவு.. அதிர்ச்சியில் டெல்லி -
வருமான வரி படிவம் வெளியீடு.. மாத சம்பளம் வாங்குவோர், சிறு வணிகர்கள்.. அறிய வேண்டியவை -
கவனம் ஈர்த்த விஜயின் TVS XL.. ஓ இதுக்குத்தானா.. இதுலையும் ரஜினியை பார்த்து காப்பியா?












Click it and Unblock the Notifications