மே.வங்கத்தில் வாக்குப் பதிவின் போது பயங்கர மோதல்- போலீஸ் துப்பாக்கிச் சூடு
Subscribe to Oneindia Tamil
கொல்கத்தா: மேற்கு வங்க மாநிலத்தில் இறுதி கட்ட வாக்குப் பதிவின் போது திரிணாமுல் காங்கிரஸ் மற்றும் மார்க்சிஸ்ட் கட்சி தொண்டர்களிடையே பயங்கர மோதல் ஏற்பட்டது. இதில் 20 பேர் படுகாயமடைந்தனர். மோதலைத் தடுக்க போலீசார் துப்பாக்கிச் சூடும் நடத்தினர்.

மேற்கு வங்கத்தில் வடக்கு 24 பர்கானா மாவட்டத்தில் பஷிர்கட் லோக்சபா தொகுதியில் இறுதி கட்ட வாக்குப் பதிவு நடைபெற்றது. அப்போது திரிணாமுல் காங்கிரஸ் மற்றும் மார்க்சிஸ்ட் தொண்டர்களிடையே கடும் மோதல் ஏற்பட்டது.

இதில் இருதரப்பும் கடுமையாக தாக்கிக் கொண்டனர். இந்த மோதலில் பலருக்கு மண்டை உடைந்து ரத்த காயம் ஏற்பட்டது. நிலைமை மோசமானதைத் தொடர்ந்து அங்கு குவிக்கப்பட்ட போலீசார் துப்பாக்கிச் சூடு நடத்தினர்.












Click it and Unblock the Notifications