மாத சம்பளம் ரூ. 3000.. போலீஸாருக்கு குளிர்பானம் வாங்கிக் கொடுத்த ஏழை பெண்.. வைரலாகும் வீடியோ
அமராவதி: ஆந்திரத்தில் ஏழை பெண் ஒருவர் லாக்டவுனின் போது ரோந்து பணியில் இருந்த போலீஸாருக்கு குளிர்பானங்கள் வாங்கிக் கொடுத்த சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Recommended Video
கொரோனா வைரஸின் தாக்கம் காரணமாக நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. இதனால் பொதுமக்கள் அவசியமில்லாமல் பொதுவெளியில் சுற்றித் திரிவதை தடுக்க போலீஸார் ரோந்து பணியில் ஈடுபட்டு வருகிறார்கள்.

கொரோனா தொற்று நோய் என்பதால் இவர்கள் இரவு பகல் பாராமல் ரோந்து பணியில் ஈடுபட்டு ஊரடங்கை மீறுவோர் மீது வழக்கு பதிவு செய்து வருகிறார்கள்.
இந்த நிலையில் ஆந்திர பிரதேச மாநிலம் கிழக்கு கோதாவரி மாவட்டம் அருகே பாதுகாப்பு பணியில் இருந்த போலீஸாரிடம் அந்த பகுதியிலுள்ள பெண் ஒருவர் குளிர்பானங்களை அளித்த சம்பவம் வைரலாகி வருகிறது.
மாத சம்பளமாக ரூ 3000 பெறும் அந்த பெண் களைப்பாக இருக்கும் போலீஸாருக்கு குளிர்பானம் வாங்கி கொடுத்தது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து அந்த பெண் கூறுகையில் எனது வருமானம் ரூ 3000 ஆகும். ஆனால் நம்மை காக்கும் மக்களை கவனித்து கொள்ள வேண்டும் என விரும்பினேன் என்றார்.
Proud🙏🏻
— IMShubham (@shubham_jain999) April 15, 2020
She said “My income is 3000 only but i want to take care the people who saving us”#IndiaFightsCorona @ShefVaidya @madhukishwar @TandonRaveena @ActorMadhavan @Payal_Rohatgi @nistula @NupurSharmaBJP @atahasnain53 @TheSatishDua @sonalgoelias @TVMohandasPai @ImRaina @jkd18 pic.twitter.com/JUxYB7JJPl
இவரை போலீஸார் பாராட்டினர். இந்த வீடியோவை முன்னாள் அமைச்சரும் முன்னாள் முதல்வர் சந்திரபாபு நாயுடுவின் மகனுமான நர லோகேஷ் ட்விட்டரில் பதிவு செய்துள்ளார். லாக்டவுனின் போது மனிதநேயத்தின் மீதான நம்பிக்கையை கொடுக்கிறது இந்த வீடியோ. அந்த பெண்ணின் விலைமதிப்பில்லாத உதவியை உண்மையிலேயே பாராட்டுகிறேன் என தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications