காவிரி: ராஜினாமா செய்துவிட்டு நேரா ஜெயிலுக்கு போங்க... 'சித்து'வுக்கு மாஜி அமைச்சர் பரபர கடிதம்
மைசூரு: உச்சநீதிமன்ற தீர்ப்பை மதித்து தமிழகத்துக்கு காவிரி நீரை திறந்துவிட்டதால் முதல்வர் பதவியை சித்தராமையா ராஜினாமா செய்ய வேண்டும் என்று கர்நாடகா மாநில முன்னாள் அமைச்சர் விஸ்வநாத் வலியுறுத்தியுள்ளார்.
இது தொடர்பாக முதல்வர் சித்தராமையாவுக்கு விஸ்வநாத் எழுதிய கடிதம் விவரம்:
கர்நாடக மாநிலத்தில் இருக்கும் மக்கள் அனைவரும் இங்கு உள்ள கபினி, கே.ஆர்.எஸ், ஹாரங்கி மற்றும் ஹேமாவதி இந்த 4 அணைகளின் நீர்மட்டத்தை வைத்துதான் குடிப்பதில் இருந்து விவசாயம் வரை செய்து வருகின்றோம். ஆனால் இந்த ஆண்டு பருவ மழையானது போதுமான அளவு இல்லை.

35 டிஎம்சிதான்...
இதனால் அனைத்து அணைகளிலும் நீர் மட்டமானது மிக குறைந்த அளவில்தான் உள்ளது. மொத்தம் 35 டி.எம்.சி தண்ணீர் தான் அணைகளில் தற்போது இருக்கும்.

எப்படி பாதுகாப்பது?
இதிலும் தமிழகத்துக்கு 20டி.எம்.சி தண்ணீரை கொடுக்க வேண்டும். எஞ்சிய 15 டி.எம்.சி நீரை வைத்து மாநில மக்களை எவ்வாறு பாதுகாக்க முடியும்?

தாரை வார்ப்பதா?
கர்நாடக மாநில மக்களின் நிலைமையை எண்ணிப் பார்க்காமல் உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பு தான் தமக்கு முக்கியம் எனக்கூறி தமிழகத்துக்கு தண்ணீரை தாரை வார்த்துவிட்டார் மாநில முதல்வர் சித்தராமையா.

ராஜினாமா செய்க
ஆகையால் அவர் தமது பதவியை ராஜினாமா செய்து விட்டு தாமாகவே சிறைக்கு சென்று குற்றவாளியாக அமர்ந்து கொள்ள வேண்டும். இவ்வாறு சித்தராமையாவுக்கு எழுதிய கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications