கோவாவில் காங்கிரஸ் 16 இடங்களில் முன்னிலை.. ஆளும் பாஜகவிற்கு பின்னடைவு
கோவா சட்டசபைத் தேர்தலுக்காக பதிவான வாக்குகள் எண்ணும் பணிகள் காலை 8 மணிக்கு தொடங்கின. இதில் காங்கிரஸ் கட்சி 16 இடங்களில் முன்னிலை வகித்து வருகிறது. ஆளும் பாஜக பின்னடைவை சந்தித்துள்ளது.
பானாஜி: கோவாவில் கடந்த 4ம் தேதி நடைபெற்ற வாக்குப் பதிவு நடைபெற்ற நிலையில், இன்று வாக்கு எண்ணும் பணிகள் தொடங்கின. இதில் காங்கிரஸ் 16 இடங்களில் முன்னிலையில் உள்ளது.
கோவா சட்டசபை தொகுதிகள் மொத்தம் 40. இந்தத் தொகுதிகளுக்கான தேர்தல் இம்மாதம் 4ம் தேதி ஒரே கட்டமாக நடைபெற்றது. தேர்தலின் போது பதிவு செய்யப்பட்ட வாக்குகள் எண்ணும் பணிகள் இன்று காலை 8 மணிக்கு தொடங்கி நடைபெற்று வருகின்றன.
வட கோவாவின் 19 தொகுதிகளுக்கான வாக்கு எண்ணும் பணிகள் கேம்பால் பாலபவனிலும் தென் கோவாவிற்கான வாக்கு எண்ணிக்கை போர்டாவில் உள்ள அரசு கல்லூரியிலும் நடைபெற்று வருகிறது. இதில் மொத்தமுள்ள 40 இடங்களில் 37 இடங்களில் முன்னிலை தெரிய வந்துள்ளன.
அவற்றில் 16 இடங்களில் காங்கிரஸ் கட்சி முன்னிலையில் உள்ளது. ஆளும் பாஜக 13 இடங்களிலும், இதரக் கட்சிகள் 5 இடங்களிலும் முன்னிலையில் உள்ளன. இதில் அம்மாநில முதல்வராக இருந்த லட்சுமிகாந்த் பர்சேகர் மன்ட்ரேம் தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளர் தயானந்த் சோப்தேவிடம் தோல்யை தழுவியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.