4வது கட்ட லோக்சபா தேர்தல்.. 9 மாநிலங்களில் வாக்குப்பதிவு நிறைவு.. 54% வாக்குகள் பதிவு!
Recommended Video
டெல்லி: இன்று நாடு முழுக்க 4ம் கட்ட லோக்சபா தேர்தல் நடைபெற்றது. 4வது கட்ட லோக்சபா தேர்தல் இன்று காலை 7 மணிக்கு துவங்கியது. மொத்தம் 71 தொகுதிகளுக்கு இன்று தேர்தல் நடந்தது. இதில் மொத்தம் 54% வாக்குகள் பதிவாகி உள்ளது.
லோக்சபா தேர்தல் 7 கட்டங்களாக நடைபெற்று வருகிறது. இதில் தமிழகம் உட்பட பல்வேறு மாநிலங்களில் மொத்தம் 4 கட்ட தேர்தல்கள் நடைபெற்றுள்ளன. இன்று 4வது கட்ட தேர்தல் 71 தொகுதிகளுக்கு நடைபெற்றது. காலை 7 மணிக்கு இத்தொகுதிகளில் வாக்குப் பதிவு துவங்கியது.

மகாராஷ்டிராவில் 17 தொகுதிகள், ராஜஸ்தான், உத்தர பிரதேசத்தில் தலா 13 தொகுதிகள், மேற்கு வங்கத்தில் 8 தொகுதிகள், மத்திய பிரதேசம் மற்றும் ஒடிசாவில் தலா 6 தொகுதிகள், பீகாரில் 5 தொகுதிகள் மற்றும் ஜார்கண்ட்டில் 3 தொகுதிகளில் தேர்தல் நடைபெற்றது.
மேலும், ஜம்மு காஷ்மீர் மாநிலம், அனந்த்நாக் தொகுதியிலும் இன்று தேர்தல் நடைபெற்றது. ஆக மொத்தம் 9 மாநிலங்களுக்கு உட்பட்ட 71 தொகுதிகள் தேர்தலை சந்தித்தது. பெரும்பாலும் ஹிந்தி பேசும் மாநிலங்களாகும்.
இதேபோல, ஒடிசா சட்டசபை தேர்தலில் எஞ்சிய 41 தொகுதிகளுக்கும் இன்றே தேர்தல் நடைபெற்றது. காஷ்மீரில் பாதுகாப்பு காரணங்களுக்காக மாலை 4 மணியுடன் வாக்குப்பதிவு நிறைவடைந்தது.
9 மாநிலங்களில் பதிவான வாக்குப்பதிவு சதவிகிதம் பின்வருமாறு:
- ஒடிசாவில் 6 மணி வரை 64.05% வாக்குகள் பதிவாகி உள்ளது.
- ராஜஸ்தானில் 6 மணி வரை 62.86% வாக்குகள் பதிவாகி உள்ளது.
- மத்திய பிரதேசத்தில் 6 மணி வரை 65.86% வாக்குகள் பதிவாகி உள்ளது.
- காஷ்மீரில் 6 மணி வரை 9.8% வாக்குகள் பதிவாகி உள்ளது.
- ஜார்கண்டில் 6 மணி வரை 63.40% வாக்குகள் பதிவாகி உள்ளது.
- பீகாரில் 6 மணி வரை 53.67% வாக்குகள் பதிவாகி உள்ளது.
- மேற்கு வங்கத்தில் 6 மணி வரை 76.47% வாக்குகள் பதிவாகி உள்ளது.
- மகாராஷ்டிராவில் 6 மணி வரை 51.06% வாக்குகள் பதிவாகி உள்ளது.
- உத்தர பிரதேசத்தில் 6 மணி வரை 53.12% வாக்குகள் பதிவாகி உள்ளது.












Click it and Unblock the Notifications