Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

எல்.இ.டி திரையில் 'அந்த வாசகங்கள்..' கண்ணை மூடிய பெண்கள்.. அதகளமான ரயில் நிலையம்.. இந்தியாவில் தான்

Subscribe to Oneindia Tamil

பாட்னா: பீகாரின் பாட்னா ரயில் நிலையத்தின் இருந்த எல்.இ.டி திரைகளில் திடீரென ஆபாச படங்கள் ஓடியது பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் மீண்டும் அதேபோல பஹல்பூர் ரயில் நிலையத்தில் உள்ள எல்.இ.டி திரைகளில் பயணிகளை முகம் சுழிக்க வைக்கும் வகையிலான இழிவான(ஆபாச) வார்த்தைகள் ஓடியது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்தியாவில் மக்கள் பயண தேவைக்கு பெரும்பாலும் ரயில்களைத்தான் சார்ந்து இருக்கின்றனர் இதனால், ரயில் நிலையங்களில் கூட்டம் எப்போதும் அலைமோதும். பல நடைமேடைகள் கொண்ட ரயில் நிலையங்களில் ரயில்கள் வரும் நடைமேடையை மக்கள் அறிந்து கொள்வதற்காக ரயில் நிலையங்களில் பல இடங்களில் பெரிய அளவிலான எல்.இ.டி திரைகள் இருப்பதை காண முடியும்.

vulgar message flashed on railway station LED screens in Bihar Bhagalpur

எடுத்துக்கட்டாக சென்னை எழும்பூர், சென்ட்ரல், தாம்பரம் போன்ற ரயில் நிலையங்களில் இந்த எல்.இ.டி திரைகள் நடைமேடைகளில் பார்த்தால் தெரியும். பல நடைமேடைகள் கொண்ட ரயில் நிலையங்களில் பெரும்பாலும் இந்த எல்.இ.டி திரைகள் இருக்கும். ரயில்கள் வரும் பிளாட்பார்ம், வருகை தரும் நேரம், புறப்படும் நேரம் உள்ளிட்ட விவரங்கள் ஓடிக்கொண்டு இருக்கும்.

தொலை தூரங்களில் இருந்து வரும் பயணிகளுக்கு ரயில்கள் வரும் நடைமேடையை அறிந்து கொள்ள இந்த எல்.இ.டி திரைகளில் ஒடும் அறிவிப்புகள் பெரிதும் பயனாக இருக்கும். கடந்த சில வாரங்களுக்கு முன்பாக பீகாரின் பாட்னா ரயில் நிலையத்தின் இருந்த எல்.இ.டி திரைகளில் திடீரென ஆபாச படங்கள் ஓடியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

ரயில் நிலையத்திற்கு வருகை தந்த பயணிகள் இப்படி ஆபாச படங்கள் ஓடியதை பார்த்து அதிர்ச்சி அடைந்ததோடு உடனடியாக ரயில் நிலைய போலீசாரிடம் புகார் செய்தனர். ரயில்வே நிர்வாகமும் உடனடியாக விசாரணைக்கு உத்தரவிட்டு, ஒப்பந்த அடிப்படையில் எல்.இ.டி திரைகளில் அறிவிப்பு வெளியிடும் பணிகளை செய்து வந்த நிறுவனத்திற்கு எதிராக நடவடிக்கை எடுத்தது.

இந்த நிலையில், பீகார் மாநிலத்தில் மீண்டும் அதேபோன்றதொரு சம்பவம் நடைபெற்றுள்ளது. பீகாரில் உள்ள பஹல்பூர் ரயில் நிலையத்தில் உள்ள எல்.இ.டி திரைகளில் திடீரன முகம் சுழிக்க வைக்கும் வகையிலான இழிவான வார்த்தைகள் ஓடியது. முதல் சில நொடிகள் பயணிகள் இதை கவனிக்கவில்லை. ஆனால், இந்த வார்த்தைகள் சுமார் 10 நிமிடம் வரை திரையில் ஓடியது.

இதை கவனித்த ரயில் நிலையத்தில் இருந்த பயணிகள் அதிர்ச்சியில் உறைந்தனர். பெண்கள், குழந்தைகள் என அனைத்து தரப்பு பயணிகளும் அதிகம் பயன்படுத்தும் ரயில் நிலையத்தில் இதுபோன்ற இழிவான வார்த்தைகள் ஓடியது பலரையும் முகம் சுழிக்க வைத்தது. இந்த ஆபாச வார்த்தைகள் ஓடியதை பயணிகள் சிலர் தங்கள் செல்போனில் படம் பிடித்து சமூக வலைத்தளங்களிலும் பரவ விட்டனர்.

இதையடுத்து, இந்த விவகாரம் தொடர்பாக ரயில்வே விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளது. தொழில்நுட்ப கோளாறுகள் காரணமாக இதுபோன்ற தவறுகள் நடப்பதாகவும் பணியில் இருந்த டெக்னிஷியனிடம் விசாரணை நடப்பதாகவும் அதிகாரிகள் தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+