வக்பு சட்ட வழக்கு- அனைத்து இடைக்கால உத்தரவுகளும் நாளை வரை நிறுத்தி வைப்பு- உச்சநீதிமன்றம் அதிரடி!
டெல்லி: மத்திய பாஜக அரசின் வக்பு சட்டத்துக்கு எதிரான வழக்கில், வக்பு வாரியம் தொடர்பான அனைத்து இடைக்கால உத்தரவுகளும் நாளை வரை நிறுத்தி வைக்கப்படுவதாக உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மேலும் வக்பு சொத்துகள் மீதான நடவடிக்கைகளை மாவட்ட ஆட்சியர்கள் மேற்கொள்ளவும் நாளை வரை உச்சநீதிமன்றம் தடை விதித்துள்ளது.
மத்தியில் ஆளும் பாஜக அரசு, வக்பு சட்டத்தை உச்சநீதிமன்றத்தில் மிக கடுமையான எதிர்ப்புகளுக்கு இடையே நிறைவேற்றியது. மத்திய அரசின் இந்த வக்பு சட்டத்துக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் 73 மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன.

உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சஞ்சீவ் கண்ணா பெஞ்ச் தலைமையில் இன்று வக்பு சட்டத்துக்கு எதிரான மனுக்கள் மீதான விசாரணை நடைபெற்றது. இந்த விசாரணையின் தொடக்கத்திலேயே, மாநில உயர்நீதிமன்றம் ஒன்றுக்கு வக்பு வழக்குகளை மாற்றுவது தொடர்பாக நீதிபதிகள் கருத்து தெரிவித்திருந்தனர்.
ஆனால் மத்திய அரசு தரப்பிலோ, உச்சநீதிமன்றம் இந்த வழக்குகளை விசாரிக்க கூடாது என்று வாதிடப்பட்டது. அப்போது குறுக்கிட்ட நீதிபதிகள், நீதிபதிகள் இருக்கையில் அமரும் போது எங்களுக்கு மதம் எதுவும் இல்லை- நீதிபதிகளை மதத்துடன் சார்புடையவராக நீங்கள் சொல்வதை ஏற்க முடியாது என்றனர்.
இதனையடுத்து வக்பு சட்டத்துக்கு எதிராக மனுதாரர்கள் சார்பில் மூத்த வழக்கறிஞர்கள் கபில் சிபல், அபிஷேக் சிங்வி, திமுக வில்சன் எம்பி உள்ளிட்டோர் தங்களது கருத்துகளை முன்வைத்தனர்.
இந்த விசாரணையின் போது, மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றமும் பல்வேறு முக்கியமான கேள்விகளை எழுப்பியது. முஸ்லிம்களின் வக்பு வாரியத்தில் இந்துக்கள் உறுப்பினராக முடியும் என்றால், இந்து அறநிலையத்துறையில் முஸ்லிம்கள் உறுப்பினராக முடியுமா? எதற்காக இப்படி ஒரு நடைமுறை என்ற கேள்வியையும் உச்சநீதிமன்றம் எழுப்பியது. அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்ட உச்சநீதிமன்றம், மத்திய அரசு பதிலளிக்கவும் உத்தரவிட்டது
மேலும், வக்பு வாரியம் தொடர்பான அனைத்து உத்தரவுகளுக்கும் நாளை வரை இடைக்கால த்டை விதித்துள்ளது உச்சநீதிமன்றம். அதேபோல வக்பு சொத்துகள் மீது மாவட்ட ஆட்சியர்கள் நடவடிக்கை எடுக்கக் கூடாது; வக்பு சொத்துகளை வகைப்படுத்தும் நடவடிக்கையை மட்டும் மேற்கொள்ளலாம் என்றும் உச்சநீதிமன்றம் உத்தரவிட்டிருக்கிறது. இந்த வழக்கின் விசாரணை நாளை பிற்பகல் நடைபெற உள்ளது.
-
விஜய் ஏமாத்திட்டாரு.. பருத்தி மூட்டை குடோனிலேயே இருந்திருக்கலாம்.. திமுகவில் இணையும் செங்கோட்டையன்? -
விஜய் வந்தால்! அதிமுக 134 தொகுதிகளில் மட்டுமே போட்டியிடும்? எடப்பாடி பழனிசாமியின் சீட் கணக்கு! -
இப்போ வேண்டாம்.. தேர்தலுக்கு பின் ஆதரவு தருகிறேன்.. சிஎம் போஸ்ட் தாங்க.. பாஜகவிடம் பேசிய விஜய்? -
திருவள்ளூர் மக்கள் ஏக்கத்துடன் பார்த்த பல ஆண்டு கனவு... ரயில் நிலையத்தில் பார்த்துமே பெரு மகிழ்ச்சி -
"இது" இல்லை என்றால் சிலிண்டர் வராது! புக்கிங் விதிகளை திடீரென மாற்றிய மத்திய அரசு! முக்கிய அறிவிப்பு -
வேலைக்கு ஆகாத டிரம்ப் பிளான்! அமெரிக்காவின் தலைமையை ஏற்க தயங்கும் உலக நாடுகள்! ஈரான் வெற்றி! -
வடிவேலுவை சினிமாவில் நுழைய விட்டதும், வளர்த்து விட்டதும் தப்பு.. ப்ளூ சட்டை மாறன் காட்டம்! பின்னணி சம்பவம் -
தவெக 6-12 தொகுதிகள் ஜெயிக்க வாய்ப்பு.. விஜய் வருகையால் அதிமுகவுக்கு பூஸ்ட்? கருத்துக்கணிப்பு ரிசல்ட் -
ஜோதிடரிடம் இருந்து வந்த மெசேஜ்.. வியூகத்தை மாற்றும் எடப்பாடி பழனிசாமி -
கிங் மேக்கர்? செக் வைத்த ’விஜய்’.. திணறும் அறிவாலயம்! - மட்ரைஸ் சர்வே சொல்லும் ‘திடுக்’ ரிப்போர்ட்! -
தங்க மழை கொட்ட போகுது.. PF வச்சு இருக்கீங்களா? சம்பள உச்சவரம்பு ₹25,000 ஆக உயருது? மாஸ் பிளான் -
தயாநிதி மாறன் கணித்த திமுகவின் 200+ ஸ்வைப்.. அப்ப வாஷ் அவுட் ஆகிவிடுமா எடப்பாடி பழனிசாமியின் அதிமுக?












Click it and Unblock the Notifications