32 ஆண்டு சேவைக்குப் பின் நாளை ரிடையர் ஆகும் ஐஎன்எஸ் கோதாவரி போர் கப்பல்
மும்பை: இந்தியாவில் தயாரிக்கப்பட்ட முதல் போர் கப்பலான ஐஎன்எஸ் கோதாவரி 32 ஆண்டு சேவைக்கு பிறகு நாளை ராணுவத்தில் இருந்து விடுவிக்கப்படுகிறது.
1960-70களில் லியாண்டர் ஃப்ரிகேட் திட்டத்தின் மூலம் இந்தியாவில் தயாரிக்கப்பட்ட முதல் போர்க்கப்பல் ஐஎன்எஸ் கோதாவரி. மும்பையில் கட்டப்பட்ட கப்பலான கோதாவரி 1980ம் ஆண்டு மே மாதம் 15ம் தேதி அறிமுகப்படுத்தப்பட்டது. அதன் பிறகு 1983ம் ஆண்டு டிசம்பர் மாதம் 10ம் தேதி ராணுவத்தில் சேர்க்கப்பட்டது.

இந்தியாவின் ராணுவ பலத்தின் அடையாளமாக ஐஎன்எஸ் கோதாவரி உலகம் முழுவதும் அனுப்பி வைக்கப்பட்டது. கோதாவரி 32 ஆண்டுகளாக ராணுவத்தில் பயன்படுத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில் கோதாவரி கப்பலுக்கு நாளையுடன் ராணுவத்தில் இருந்து ஓய்வு அளிக்கப்படுகிறது.
கடந்த 32 ஆண்டுகளில் ஐஎன்எஸ் கோதாவரி ஆபரேஷன் ஜுபிடர், ஆபரேஷன் ஷீல்ட், ஆபரேஷன் போல்ஸ்டர் உள்ளிட்ட பல ராணுவ ஆபரேஷன்களில் பயன்படுத்தப்பட்டுள்ளது.
1998ம் ஆண்டு ஆபரேஷன் கேக்டஸில் பயன்படுத்தப்பட்ட கோதாவரியின் உதவியால் மாலத்தீவு அரசை கவிழ்க்கும் சதி முறியடிக்கப்பட்டது. கிளாஸ் ஃப்ரிகேட் கப்பல்களில் முதன்மையானது ஐஎன்எஸ் கோதாவரி. அதன் பிறகு கங்கா, கோமதி ஆகிய கப்பல்கள் கட்டப்பட்டன.
ஐஎன்எஸ் கோதாவரிக்கு ஓய்வு அளிக்கப்படுவது வருத்தம் அளிப்பதாக அந்த கப்பலில் பணியாற்றிய அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
-
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது? -
இடைத்தேர்தலில் பொது வேட்பாளர்களை நிறுத்தி வெற்றி பெறச் செய்வோம்.. விஜய்க்கு அன்புமணி எச்சரிக்கை -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
எடப்பாடி வீட்டிற்கு வந்த எஸ்பி வேலுமணி.. சிவி சண்முகம் மட்டும் மிஸ்ஸிங்.. தனித்துவிடப்படுகிறாரா?












Click it and Unblock the Notifications