டுவிஸ்ட் மேல் டுவிஸ்ட்: கொலை செய்யப்பட்டபோது ஷீனா போரா 4 மாதம் கர்ப்பம்?
மும்பை: கொலை செய்யப்பட்டபோது ஷீனா போரா கர்ப்பமாக இருந்தது தெரிய வந்துள்ளது.
ஸ்டார் இந்தியா நிறுவனத்தின் முன்னாள் சிஇஓ பீட்டர் முகர்ஜியின் மனைவி இந்திராணி முகர்ஜி தனது மகள் ஷீனா போராவை கடந்த 2012ம் ஆண்டு ஏப்ரல் மாதம் 24ம் தேதி மும்பையில் வைத்து கொலை செய்து அவரது உடலை பெட்ரோல் ஊற்றி எரித்துவிட்டார்.
இந்த வழக்கில் இந்திராணி, அவரது முன்னாள் கணவர் சஞ்சீவ் கன்னா, முன்னாள் டிரைவர் ராய் ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்நிலையில் கொலை செய்யப்பட்டபோது ஷீனா 4 மாதம் கர்ப்பமாக இருந்ததாக கூறப்படுகிறது.
இந்திராணிக்கு நெருக்கமான ஒருவர் தான் ஷீனாவின் கர்ப்பத்திற்கு காரணமாம். அவரும், ஷீனாவும் சேர்ந்து தாய்லாந்து சென்றபோது அங்கு மிகவும் நெருக்கமாக இருந்துள்ளனர். அவருக்கு ஷீனா இந்திராணியின் மகள் என்பது முதலில் தெரியாது.
இந்திராணி இது குறித்து கண்டுபிடித்து அந்த நபரிடம் கேட்டபோது அவர் தனக்கும் ஷீனாவுக்கும் இடையேயான உறவு பற்றி ஒப்புக் கொண்டுள்ளார். இந்திராணி எதற்காக தனது மகளை திட்டமிட்டு கொலை செய்தார் என்பது மட்டும் தொடர்ந்து மர்மமாக உள்ளது.