மோடியைப் பார்த்து பயப்படுகிறோம்.. மூத்த ஷியா மதகுரு

Subscribe to Oneindia Tamil

லக்னோ: மோடியைப் பார்த்து நாங்கள் அஞ்சுகிறோம். அதேசமயம், பாஜக தலைவர் ராஜ்நாத் சிங், வாஜ்பாயைப் போல மென்மையானவர் என்று மூத்த ஷியா பிரிவு இஸ்லாமிய மதகுரு மெளலானா கல்பே ஜாவத் கூறியுள்ளார்.

மூத்த ஷியா பிரிவு மதகுரு கல்பே ஜாவத். அவரை இன்று பாஜக தலைவர் ராஜ்நாத் சிங் சந்தித்துப் பேசினார். பின்னர் ஜாவத் செய்தியாளர்களிடம் பேசுகையில், முன்னாள் பிரதமர் வாஜ்பாயைப் போன்றவர் ராஜ்நாத் சிங். நிதானமானவர். ஆனால் மோடியைப் பார்த்து நாங்கள் பயப்படுகிறோம்.

We are scared of Modi, but Rajnath is like Vajpayee: top Shia cleric

வாக்களிப்பது குறித்து இஸ்லாமியர்களுக்கு நான் எந்த உத்தரவையும் பிறப்பிக்கப் போவதில்லை. இருப்பினும் சமுதாயத்தினருக்கு முன்பு எனது கருத்துக்களைத் தெரிவிப்பேன் என்றார் அவர்.

இதேபோல மெளலானா கல்பே சாதிக், மெளலானா காலித் ரஷீத் ஆகிய மேலும் இரு மத குருக்களையும் ராஜ்நாத் சிங் சந்தித்துப் பேசினார் என்பது குறிப்பிடத்தக்கது.

வாஜ்பாய் நின்று வென்ற லக்னோவில்தான் இந்த முறை ராஜ்நாத் சிங் போட்டியிடுவது நினைவிருக்கலாம்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+