பெரும்பான்மை இருப்பதற்காக அச்சுறுத்தும் அரசியல் செய்வதா? பாஜகவில் தொடரும் நேதாஜி பேரனின் கலகக் குரல்
கொல்கத்தா: பெரும்பான்மை பலம் இருப்பதற்காக அச்சுறுத்தும் அரசியலை மேற்கொள்ளக் கூடாது என பாஜகவுக்கு அக்கட்சியின் மேற்கு வங்க துணை தலைவரும் நேதாஜி சுபாஷ் சந்திரபோஸின் பேரனுமாகிய சந்திரகுமார் போஸ் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
மத்திய அரசின் குடியுரிமை சட்டத் திருத்தத்தை சந்திரகுமார் போஸ் தொடர்ந்து எதிர்த்து வருகிறார். இது பாஜகவில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில் காங்கிரஸ் மூத்த தலைவர் கபில்சிபல், சி.ஏ.ஏ. நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டுவிட்டது. ஆகையால் மாநில அரசுகள் அமல்படுத்த முடியாது என கூற முடியாது என கூறி புதிய சர்ச்சையை கிளப்பியிருக்கிறார்.

சட்ட ரீதியானது மட்டுமே
இந்நிலையில் ஏ.என்.ஐ. செய்தி நிறுவனத்துக்கு பாஜகவின் மேற்கு வங்க துணைத் தலைவர் சந்திரகுமார் போஸ் அளித்த பேட்டியில் கூறியுள்ளதாவது: நாடாளுமன்றத்தில் ஒரு சட்டம் நிறைவேற்றப்பட்டால் அது மாநில அரசுகளை கட்டுப்படுத்தும். இது சட்ட ரீதியான ஒரு நடைமுறை அவ்வளவுதான்.

மக்கள் நம்பிக்கை அவசியம்
ஆனால் ஜனநாயக ரீதியாக எந்த ஒரு சட்டமுமே இந்த நாட்டு மக்களின் நம்பிக்கைப் பெற வேண்டியது அவசியம். சி.ஏ.ஏ. சரியானது எனில் மக்களிடம் சென்று விளக்கம் தர வேண்டும்.

அவதூறு பேச கூடாது
சி.ஏ.ஏ.வின் இந்த அம்சங்கள் சரியானவை; நீங்கள் எதிர்ப்பு தெரிவிக்கும் கருத்துகள் தவறானவை என்பதை மக்களுக்கு புரிய வைக்க வேண்டும். இதை செய்யாமல் அவதூறாக பேச கூடாது.

அச்சுறுத்தல் அரசியல்
பெரும்பான்மை இருப்பதற்காக அச்சுறுத்தும் அரசியலை கையாளக் கூடாது. சி.ஏ.ஏவின் நல்ல அம்சங்களை மக்களிடம் முதலில் விளக்க வேண்டும்.

மதத்தை குறிப்பிட வேண்டாம்
துன்புறுத்தப்படும் சிறுபான்மையினர் என பொதுவாக சி.ஏ.ஏ.வில் குறிப்பிட்டிருக்க வேண்டும். மதங்களை சி.ஏ.ஏ.வில் குறிப்பிட்டிருக்க தேவையில்லை. நமது அணுகுமுறை நிச்சயம் வித்தியாசமானதாக இருக்க வேண்டும். இவ்வாறு சந்திரகுமார் போஸ் கூறியுள்ளார்.
-
கட்சியையே பறிகொடுக்கும் மம்தா? மே.வங்கத்தில் எதிர்க்கட்சி தலைவரான சஸ்பெண்ட் எம்எல்ஏ! ரிதப்ரதா பானர்ஜி யார்? -
மம்தாவுக்கு மரண அடி.. உடையும் திரிணாமுல் காங்கிரஸ்? தீதீ-ஐ விட்டு செல்லும் 59 எம்எல்ஏக்கள் -
மம்தாவுக்கு புது பிரச்சனை.. இரண்டாக உடையும் திரிணாமுல் காங்கிரஸ்! யார் அந்த கருப்பு ஆடு? -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கூட்டுறவு வங்கி நகைக்கடன் வாங்கியோருக்கு குட் நியூஸ்! பணம் கட்டலயா? ஏலத்திலிருந்து நகை மீட்க ஈஸி வழி -
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் -
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
"முதலமைச்சருக்கு நன்றி.. ஆனால்! எதிரியின் எதிரி நண்பனா? விஜய் ரசிகர்கள் குறித்து பேசிய அஜித் சகோதரர் -
வீரமணி ஒரே போடு.. திருச்சியில் முதலமைச்சர் விஜய் பேசிய அந்த பேச்சால் மொத்த பேருக்கும் முகச்சுளிப்பு? -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம் -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
கோவையில் அருவியாக மாறிய மேம்பாலம் .. மேட்டுப்பாளையம் ஊட்டி செல்லும் வழியில் மாறிய காட்சி












Click it and Unblock the Notifications