மேற்கு வங்காளத்தில் 8 குழந்தைகளை பலி கொண்ட மர்ம நோய்! மேலும் 17 பேர் மருத்துவமனையில் அனுமதி!!
Subscribe to Oneindia Tamil
கொல்கத்தா: மேற்கு வங்கத்தில் மர்ம நோய்க்கு 8 குழந்தைகள் பலியான சம்பவம் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. மேலும் 17 குழந்தைகள் இந்த மர்ம நோயால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
மேற்கு வங்கத்தின் மால்டா மாவட்டத்தின் காலியாசக் பகுதியை சேர்ந்த குழந்தைகள் திடீர் வாந்தி மற்றும் காய்ச்சலினால் பாதிக்கப்பட்டு அரசு மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டனர். ஆனால் சிகிச்சை பலனின்றி 8 குழந்தைகள் பலியாகினர்.
ஒன்று முதல் 6 வயதுக்குட்பட்ட குழந்தைகளின் நோய்க்கான காரணம் என்ன? என்பது இன்னும் கண்டறியப்படவில்லை என்று தெரிகிறது. இதே போன்ற கோளாறுகளுடன் மேலும் 17 குழந்தைகள் மால்டா அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இதனையடுத்து கொல்கத்தாவில் இருந்து மருத்துவ நிபுணர்கள் அடங்கிய குழு காலியாசக் பகுதியை பார்வையிட விரைந்துள்ளது.












Click it and Unblock the Notifications