விபச்சாரத்தில் ஈடுபடும் பெண்களுக்கு புதிய மறுவாழ்வுத் திட்டம்... மே.வங்க அரசு அறிமுகம்
கொல்கத்தா: பாலியல் தொழிலில் ஈடுபடும் பெண்களின் மறுவாழ்விற்காக மேற்கு வங்க மாநில அரசு புதிய திட்டம் ஒன்றை அறிமுகம் செய்துள்ளது.
முக்திர் அலோ என்ற பெயரிலான அந்தத் திட்டமானது, முற்றிலும் பாலியல் தொழிலில் ஈடுபட்டுள்ள பெண்கள் அதிலிருந்து மீண்டு மறுவாழ்வு பெறுவதற்கு வகை செய்யும்.

இந்தத் திட்டத்தின் மூலம் விபச்சாரத்தில் ஈடுபட்டுள்ள பெண்களுக்கு அச்சுத் துறை உள்ளிட்டவற்றில் பயிற்சி தரப்படும். 9 மாத பயிற்சியின்போது மாதா மாதம் ரூ. 2500 சம்பளம், இலவச தங்குமிடம், உணவு ஆகியவை வழங்கப்படும்.
இந்த பயிற்சியை பெற்ற பின்னர், அவர்கள் சொந்தமாகவோ, சுய உதவிக் குழு வழியாகவோ தொழில் தொடங்க விரும்பினால், அவர்களுக்கு ரூ.25 ஆயிரம் முதலீட்டு தொகையாக வழங்கப்படும். இந்த திட்டத்தை மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி இந்த மாதம் இறுதியில் தொடங்கி வைக்கிறார்.
இதுகுறித்து அம்மாநில பெண்கள் நலத்துறை அமைச்சர் சஷி பாஞ்சா கூறுகையில், "தற்போது பாலியல் தொழிலில் ஈடுபட்டு வரும் பெண்கள், அதிலிருந்து மீண்டு கண்ணியமிக்க வாழ்க்கையை தொடங்க விரும்புகின்றனர். அவர்களுக்கான அந்த வாய்ப்பை நாங்கள் ஏற்படுத்தி தருவதற்காக புதிய திட்டத்தை தொடங்க இருக்கிறோம்.
இந்த திட்டத்தில், முதல் கட்டமாக சிறுமிகளை நாங்கள் அடையாளம் கண்டு உள்ளோம். அவர்களுடன் பாலியல் தொழிலை விட முன்வரும் பெண்களும் இதில் இணைந்து கொள்ளலாம். இந்த திட்டத்தின் மூலம், அவர்களுக்கு பயிற்சி அளித்து மற்றும் திறமைகளை அளித்து அதனைக் கொண்டு புதிய வாழ்க்கை ஒன்றை அவர்கள் தொடங்க வேண்டும் என்பதே எங்கள் எண்ணம்" என்றார் அவர்.
இந்தத் திட்டத்தின் கீழ் முதல் கட்டமாக 50 பெண்களுக்கு பயிற்சி அளிக்கப்படவுள்ளதாம்.
-
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது? -
இடைத்தேர்தலில் பொது வேட்பாளர்களை நிறுத்தி வெற்றி பெறச் செய்வோம்.. விஜய்க்கு அன்புமணி எச்சரிக்கை -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
எடப்பாடி வீட்டிற்கு வந்த எஸ்பி வேலுமணி.. சிவி சண்முகம் மட்டும் மிஸ்ஸிங்.. தனித்துவிடப்படுகிறாரா?












Click it and Unblock the Notifications