வேளாண் சட்டத்தை எதிர்த்து மே.வங்க சட்டசபையில் தீர்மானம்..'ஜெய்ஸ்ரீ ராம்' எனக்கூறி பா.ஜ.க வெளிநடப்பு!
கொல்கத்தா: மத்திய அரசின் வேளாண் சட்டத்துக்கு எதிராக மேற்கு வங்க சட்டசபையில் இன்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
மூன்று வேளாண் சட்டங்களும் விவசாயிகளுக்கு எதிர்ப்பாகவும், நிறுவனங்களுக்கு சாதகமாகவும் உள்ளது என்று இந்த தீர்மானம் கூறுகிறது.
பா.ஜ.க. எம்.எல்.ஏக்கள் இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, 'ஜெய் ஸ்ரீ ராம்' என கோஷமிட்டு சபையில் இருந்து வெளிநடப்பு செய்தனர்.

போராட்டம்
மத்திய அரசின் வேளாண் சட்டங்களை ரத்து செய்ய வலியுறுத்தி தலைநகர் டெல்லியில் பஞ்சாப், ஹரியானா, உத்தரபிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களை சேர்ந்த விவசாயிகள் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். மத்திய அரசு அவர்களுடன் பல கட்ட பேச்சுவார்த்தை நடத்திய போதிலும் அது தோல்வியில்தான் முடிந்து வருகிறது.

மே.வங்க சட்டசபையில் தீர்மானம்
இந்த சட்டத்தை ரத்து செய்யக்கோரி காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றன. இதுவரை, பாஜக ஆட்சியில் இல்லாத பஞ்சாப், சத்தீஸ்கர், ராஜஸ்தான், கேரளா மற்றும் டெல்லி ஆகிய மாநிலங்கள் தங்களது சட்டசபையில் வேளாண் சட்டத்துக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றியுள்ளன. இந்த நிலையில் மேற்கு வங்க அரசும், சட்டசபையில் வேளாண் சட்டத்துக்கு எதிராக இன்று தீர்மானம் நிறைவேற்றியுள்ளது.

பா.ஜ.க. எம்.எல்.ஏக்கள் எதிர்ப்பு
மேற்கு வங்க சட்டசபையில் மாநில நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சர் பார்த்தா சாட்டர்ஜி இன்று இந்த தீர்மானத்தை தாக்கல் செய்தார். அதன்பின்னர் ஆளும் கட்சி எம்.எல்.ஏக்கள் ஏகோபித்த ஆதரவுடன் மத்திய அரசின் வேளாண் சட்டத்துக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அந்த வேளையில் சபையில் இருந்த பா.ஜ.க. எம்.எல்.ஏக்கள் தங்களது சட்டமன்றக் கட்சித் தலைவர் மனோஜ் டிக்கா தலைமையில் சபையின் மைய பகுதிக்கு சென்று இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.

'ஜெய் ஸ்ரீ ராம்' கோஷம்
தொடர்ந்து பா.ஜ.க. எம்.எல்.ஏக்கள் சபையில் ''ஜெய் ஸ்ரீ ராம்' என்று கோஷமிட்டு சட்டசபையில் இருந்து வெளிநடப்பு செய்தனர். மேற்கு வங்க சட்டசபையில் இன்று நிறைவேற்றிய தீர்மானம் மூன்று வேளாண் சட்டங்களும் விவசாயிகளுக்கு எதிர்ப்பாகவும், நிறுவனங்களுக்கு சாதகமாகவும் உள்ளது என்று கூறுகிறது. வேளாண் விளைபொருட்களை வாங்குவதை நிறுத்த கட்டாயப்படுத்தப்படும் சூழ்நிலையை இந்த சட்டங்கள் உருவாக்கும் என்றும், இது பொது விநியோக முறை சரிவடைவதற்கும், பதுக்கல் மற்றும் கறுப்பு சந்தைப்படுத்தல் ஆகியவற்றில் முன்னேறுவதற்கும் வழிவகுக்கும் என்று அந்த தீர்மானம் கூறுகிறது.
-
"நாளை மத்திய அரசு இருக்காது.. அப்போ உங்களை பார்த்துக்கறோம்.." போன் போட்டு மிரட்டிய மம்தா? பரபரப்பு -
திரிணாமுல் எம்பிகள் மீது தொடர் தாக்குதல்.. பாஜகதான் காரணமா? வெளியான ஷாக் தகவல்! -
மூத்த திரிணாமுல் தலைவர் மண்டை உடைப்பு.. ரத்தம் கொட்ட கொட்ட பானர்ஜி செய்த சம்பவம்! பரபரப்பு -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன்












Click it and Unblock the Notifications