மேற்குவங்க உள்ளாட்சி தேர்தல்: பலத்தை காட்டிய மம்தா.. பாதியை கூட நெருங்காத பாஜக! பரிதாப நிலையில் காங்
கொல்கத்தா: மேற்கு வங்க மாநிலத்தில் பயங்கர வன்முறைக்கு இடையே நடைபெற்ற உள்ளாட்சி தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணும் பணி நடைபெற்று வருகிறது. திரிணாமூல் காங்கிரஸ் கட்சி பெரும்பாலான இடங்களில் முன்னிலை வகிக்கிறது.
மேற்கு வங்க மாநிலத்தில் ஊரக உள்ளாட்சித் தேர்தல் கடந்த 8 ஆம் தேதி நடைபெற்றது. பயங்கர வன்முறைக்கு இடையே நடைபெற்ற இந்த தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று எண்ணப்படுகின்றன. மேற்கு வங்காளத்தில் திரிணாமூல் கங்கிரஸ் கட்சியின் ஆட்சி நடைபெற்று வருகிறது. மம்தா பானர்ஜி முதல்வராக இருக்கிறார். அம்மாநிலத்தில் உள்ளாட்சி பிரதிநிதிகளின் 5 ஆண்டு பதவிகாலம் நிறைவடைந்ததை தொடர்ந்து ஜூலை 8 ஆம் ஊரக உள்ளாட்சித் தேர்தல் நடைபெற்றது.

இந்த தேர்தலில் திரிணாமூல் காங்கிரஸ், இடதுசாரிகள், காங்கிரஸ், பாஜக ஆகிய கட்சிகள் தனித்தனியாக போட்டியிடுகின்றன. அம்மாநிலத்தின் பல்வேறு இடங்களில் ஊரக உள்ளாட்சித் தேர்தல் அறிவிக்கப்பட்டதில் இருந்தே வன்முறை வெடித்தது. தேர்தல் பிரச்சாரங்களின்போது கட்சியினர் இடையே மோதல் சம்பவங்கள் ஏற்பட்டன. இந்த வன்முறையில் 12 முதல் 18 பேர் வரை கொல்லப்பட்டு இருக்கலாம் என்று கூறப்படுகிறது.
இந்த நிலையில் கடந்த 8 ஆம் தேதி பலத்த பாதுகாப்புக்கு மத்தியில் தேர்தலுக்கான வாக்குப்பதிவு தொடங்கியது. பாதுகாப்பு பணியில் 65,000 துணை ராணுவப் படையினர் ஈடுபடுத்தப்பட்டனர். மேற்கு வங்க மாநில காவல்துறை சார்பில் 70 ஆயிரம் போலீசார் தேர்தல் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டனர். தேர்தல் நடந்த அன்றும் பயங்கர வன்முறை ஏற்பட்டது.

வன்முறை சம்பவங்களால் பல இடங்களில் வாக்குப்பதிவு நிறுத்தப்பட்டன. பல வாக்குச்சாவடிகளில் கள்ள ஓட்டு போடும் வீடியோக்களும் வெளியாகின. இதையடுத்து நேற்று 697 வாக்குச்சாவடிகளில் மறு வாக்குப்பதிவு நடைபெற்றது. இந்த நிலையில் உள்ளாட்சி தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று எண்ணும் பணி நடைபெற்று வருகிறது. வாக்குப்பதிவின் போதே வன்முறை நடைபெற்றதால் அங்கு பெரும் பதற்றம் நிலவுகிறது.
வாக்கு எண்ணும் மையங்களில் மத்திய பாதுகாப்பு படை பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. சிசிடிவி கேமராவிலும் வாக்கு எண்ணிக்கை பதிவு செய்யப்பட்டு வருகிறது. காலை 8 மணி முதல் வாக்கு எண்ணும் பணி தொடங்கி நடைபெற்று வருகிறது. பெரும்பாலான கிராம பஞ்சாயத்து மற்றும் மாவட்ட ஊராட்சிகளில் திரிணாமூல் காங்கிரஸ் கட்சியே முன்னிலை வகிக்கிறது. தற்போதைய நிலவரப்படி திரிணாமூல் காங்கிரஸ் 1,629 இடங்களில் முன்னிலையில் உள்ளது. பாஜக 364 இடங்களிலும் சிபிஐஎம் கட்சி 362 இடங்களிலும் காங்கிரஸ் கட்சிக்கு 118 இடங்களிலும் முன்னிலை பெற்றுள்ளது.
தேர்தலின் போது வன்முறை வெடித்து மாநிலம் முழுவதும் பெரும் பதற்றமான சூழல் ஏற்பட்டது. இதனால், வாக்கு எண்ணிக்கையின் போது உச்ச கட்ட பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. இதற்கு மத்தியில் டைமண்ட் துறைமுக பகுதியில் வாக்கு எண்ணிக்கை நடைபெறும் இடத்தில் வெடி குண்டு வீசப்பட்டுள்ளது. இதனால், அங்கு பதற்றமான சூழல் ஏற்பட்டு இருக்கிறது.
-
சிறகடிக்க ஆசை: விஜயா செய்த சதி, ஜெயிலுக்கு போகும் மொத்த குடும்பம்.. மனோஜால் ஏற்படும் விபரீதம்! ஜெயித்த ரோகிணி -
தேர்தல் ஆணையத்தின் அதிரடி ‘டிரான்ஸ்பர்’ மேளா.. காலியான எடப்பாடி கணக்கு... ஸ்டாலின் பவர்ஃபுல் மூவ்! -
எடப்பாடிக்கு அருகில் சீட்.. ஒரே விமானத்தில் பயணம்.. கடைசி நேரத்தில் பிளானை மாற்றிய உதயநிதி! -
வில்லிவாக்கத்தில் ட்விஸ்ட்.. ஆதவ் அர்ஜுனாவுக்கு அடிக்குமா ஜாக்பாட்? களம் எப்படி இருக்கிறது? -
"கொஞ்ச நேரம்.." என கொஞ்சியபோது காதலில் விழாதவர் உண்டோ? ஆஷா போஸ்லேவின் மறக்க முடியாத தமிழ் பாடல்கள் -
தவெக ஆட்சிக்கு வந்த 6 மாதத்தில் தமிழ்நாடு சேவை உரிமை சட்டம்.. குமரியில் விஜய் அளித்த வாக்குறுதிகள் -
ஈரான் விரித்த வலையில் ஈரானே சிக்கிடுச்சு.. அமெரிக்காவே கவலைப்படும் அளவிற்கு நிலைமை கைமீறியது -
மகளிர் உரிமைத் தொகை.. இன்னும் ஆட்டம் முடியல.. வரப்போகும் 2 ‘மெகா’ மாற்றங்கள்.. கவனிங்க! -
விட்டு விளாசிய பிடிஆர்! கோபத்தின் உச்சிக்கே போன குஷ்பு சுந்தர் சி.. மோதல் உச்சகட்டம்! என்ன நடக்குது? -
இஸ்லாமாபாத் டாக்ஸ்.. ட்ரம்ப் - ஈரான் டீல்.. இந்தியா மிஸ் செய்த சான்ஸ்? அடித்து தூக்கிய பாகிஸ்தான் -
அவ்ளோதான் முடிச்சுவிட்டீங்க போங்க.. ஒரே வரியில் தவெக பர்னிச்சரை சல்லி சல்லியாக்கிய ஸ்டாலின் -
சுப்மன் கில் ஆட்டத்தை பார்க்க வந்த சாரா டெண்டுல்கர்.. பாவமாக அமர்ந்திருந்த அர்ஜுன் டெண்டுல்கர் மனைவி












Click it and Unblock the Notifications