புதிதாக பொறுப்பேற்ற 9 இணை அமைச்சர்களுக்கான துறைகள்
மத்திய அமைச்சரவையில் புதிதாக பொறுப்பேற்ற 9 அமைச்சர்களுக்கு துறைகள் ஒதுக்கப்பட்டுள்ளன.
டெல்லி: மத்திய அமைச்சரவையில் புதிதாக பொறுப்பேற்ற அமைச்சர்களுக்கு துறைகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன.
மத்திய அமைச்சரவை இன்று மூன்றாவது முறையாக மாற்றி அமைக்கப்பட்டது. இணை அமைச்சர்களாக இருந்த பியூஷ் கோயல், நிர்மலா சீதாராமன் உள்பட 4 பேர் கேபினட் அமைச்சர்களாக பொறுப்பேற்றனர்.
அஸ்வின் குமார் செளபே, சத்யபால் சிங், ஷிவ் பிரதாப் சுக்லா, ராஜ்குமார் சிங், வீரேந்திர குமார், ஹர்தீப் சிங் புரி, கஜேந்திர சிங் ஷெகவாத், அனந்தகுமார், அல்போன்ஸ் ஆகிய 9 பேர் இணை அமைச்சர்களாக பதவியேற்றுக் கொண்டனர்.
இணை அமைச்சர்கள் (தனிப்பொறுப்பு) துறைகள்:
ராஜ்குமார் சிங்- மின்துறை (தனிபொறுப்பு), புதுப்பிக்கத்தக்க எரிவாயு துறை
அல்போன்ஸ் - சுற்றுலா துறை (தனிபொறுப்பு), மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்பம்
ஹர்தீப் சிங் புரி- வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சி (தனிபொறுப்பு)
இணை அமைச்சர்களின் துறைகள்:
அனந்தகுமார்- திறன் மேம்பாடு மற்றும் தொழில் துறை
சத்யபால் சிங்- மனிதவளம், நீர் பாசனம், தூய்மை கங்கை திட்டம்
கஜேந்திர சிங்- வேளாண்மை மற்றும் விவசாயிகள் நலன்
ஷிவ் பிரதாப் சிங்- நிதி துறை
அஸ்வின் குமார் - சுகாதாரம் மற்றும் குடும்ப நலம் துறை
வீரேந்திர குமார் - பெண்கள் மற்றும் குழந்தை நலன் மேம்பாடு மற்றும் சிறுபான்மை துறை