Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

வயலை தோண்டி பார்த்த விவசாயிக்கு ஷாக்.. உள்ளே கொட்டி கிடந்த வைரம்.. அடுத்து என்ன செய்தார் தெரியுமா?

Subscribe to Oneindia Tamil

ஹைதராபாத்: ஆந்திர மாநிலம் கர்னூல் மாவட்டத்தில் விவசாயி ஒருவர் தனது வயலில் வைரத்தை கண்டுபிடித்தது பெரிய அளவில் கவனம் பெற்றுள்ளது.

ஆந்திரப் பிரதேச மாநிலம் கர்னூல் மாவட்டத்தில் உள்ள ஜொன்னகிரி பகுதியில் இந்த சம்பவம் நடந்து உள்ளது. அங்கே அருகருகே உள்ள கிராமங்களில் பல விதமான நம்பிக்கைகள் உள்ளன. அதில் ஒரு நம்பிக்கைதான் வைரம் தொடர்பானது.

அதாவது தங்கள் வயல்களில் வைரம் இருக்கும் என்று சில கிராம மக்கள் தீவிரமாக நம்பி வருகிறார்கள் . பெகதிராய், மஹாதேவபுரம் , ஜொன்னகிரி, துக்கிலி, பேராபலி, மஹாநந்தி போன்ற கிராமங்களை சேர்ந்த மக்கள் தங்கள் வயல்களில் வைரம் இருக்கும் என்று தீவிரமாக நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.

What did a farmer do after finding diamond in Andhra Pradesh farming field?

அதிலும் மழைக்கு பின் இந்த வைரம் வெளியே வரும் என்றும் நம்பி வருகின்றனர்.அதன்படியே இங்கே அடிக்கடி வைரம் கண்டுபிடிக்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது. உதாரணமாக கடந்த 3 ஆண்டுகளுக்கு முன் விவசாயி ஒருவர் இங்கே பெரிய வைர கல் ஒன்றை கண்டுபிடித்து உள்ளாராம்.

அதை 60 லட்சம் ரூபாய்க்கு அவர் விற்றதாகவும் கூறப்படுகிறது. இதேபோல் பல விவசாயிகள் அங்கே வைரங்களை விற்று வந்ததாகவும், இதனால் அவர்கள் திடீர் பணக்காரர்கள் ஆனதாகவும் கூறப்படுகிறது.

சிலர் 2-3 கோடி ரூபாய்க்கு கூட தங்கள் வைரத்தை விற்றுவிட்டதாக கூறப்படுகிறது. மழை காலத்திற்கு பின்புதான் பொதுவாக இங்கே வைரம் கிடைப்பதாக நம்பப்படுகிறது. அங்கே இதற்காக விவசாயிகள் நீண்ட தேடுதல் வேட்டைகளையும் கூட நடத்தி வருகின்றனர்.

அதன்படி வீட்டு வேலைகளை விட்டுவிட்டு.. இவர்கள் மழைக்கு பின் வயல்களில் அமர்ந்து இப்படி வைரத்தை கண்டுபிடிப்பதற்காக தீவிர தேடுதல் வேட்டையை மேற்கொள்வதை வழக்கமாக வைத்து இருக்கின்றனர். இதை கிட்டத்தட்ட திருவிழா போல கொண்டாட்டமாக செய்தும் வருகின்றனர்.

இப்படிப்பட்ட வைர வேட்டைகளில்தான் விவசாயிகள் பலர் வைரங்களை கண்டுபிடிக்கும் வழக்கம் உள்ளது. அந்த வகையில்தான் ஆந்திர மாநிலம் கர்னூல் மாவட்டத்தில் விவசாயி ஒருவர் தனது வயலில் வைரத்தை கண்டுபிடித்தது பெரிய அளவில் கவனம் பெற்றுள்ளது.

வயிலில் மாட்டை வைத்து உழுதுகொண்டு இருந்த போது அவர் வைரத்தை கண்டுபிடித்ததாக கூறப்படுகிறது. 30 கேரட் வைரம் இது என்று கூறப்படுகிறது. இதை 2 கோடிக்கு அவர் விட்டதாகவும் அப்பகுதி மக்கள் தெரிவித்து உள்ளனர்.

இதையடுத்து போலீசார் தற்போது அங்கே ரகசியமாக டீம் ஒன்றை இறக்கி விசாரணை செய்து வருகிறார்களாம்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+