காதலர் தினத்தன்று கோஹ்லியும், அனுஷ்காவும் என்ன செய்தார்கள் தெரியுமா?
மும்பை: காதல் முறிவுக்கு பிறகு கிரிக்கெட் வீரர் விராட் கோஹ்லியும், நடிகை அனுஷ்கா சர்மாவும் காதலர் தினத்தன்று என்ன செய்தார்கள் என்பது தெரிய வந்துள்ளது.
கிரிக்கெட் வீரர் விராட் கோஹ்லியும், பாலிவுட் நடிகை அனுஷ்கா சர்மாவும் காதலித்து வந்தனர். முதலில் நள்ளிரவில் ஊர் சுற்றியவர்கள் பின்னர் பகல் நேரத்திலேயே ஜோடி போட்டு வந்தனர்.
இருவரும் அருமையான ஜோடி என்று பாலிவுட்காரர்கள் தெரிவித்தனர்.
காதல் முறிவு
கோஹ்லி அனுஷ்காவை திருமணம் செய்து கொள்ள விரும்பினார். ஆனால் அனுஷ்காவோ எனக்கு தற்போதைக்கு சினிமா தான் முக்கியம் என்று கூறி திருமணத்திற்கு மறுப்பு தெரிவித்தார். இதனால் அவர்களின் காதல் முறிந்துவிட்டது.
|
கோஹ்லி
காதலர் தினத்தன்று கோஹ்லி டெல்லியில் உள்ல டவுன் ஹால் கான் மார்க்கெட்டிற்கு சென்று மனம் போன்று சாப்பிட்டு மகிழ்ந்துள்ளார்.
அனுஷ்கா
காதலரை பிரிந்த அனுஷ்கா சர்மா தான் வளர்க்கும் நாயான ட்யூடுடன் தான் காதலர் தினத்தை கொண்டாடியுள்ளார். கோஹ்லியை பிரிந்த பிறகு அவர் ட்யூடுடன் தான் அதிக நேரம் செலவிடுகிறார்.
பிசி
கோஹ்லி கிரிக்கெட்டில் பிசியாகி விட்டார். அனுஷ்காவோ சல்மான் கானுடன் நடிக்கும் சுல்தான் படத்திற்காக குத்துச்சண்டை கற்றுக் கொண்டிருக்கிறார்.