அய்யய்யோ மழை காலம் வந்துடுச்சே: கவலையில் பெங்களூர்வாசிகள்
பெங்களூர்: பெங்களூர் மக்களுக்கு மழை காலம் வந்தாலே கூடவே எரிச்சலும், அலுப்பும் வந்துவிடுகிறது. அதற்கு காரணம் இல்லாமல் இல்லை.
கர்நாடக மாநிலம் பெங்களூரில் கடந்த சில நாட்களாக மாலை நேரமாகிவிட்டால் வான் இருட்டிக் கொண்டு வந்து மழை கொட்டு கொட்டு என கொட்டித் தீர்க்கிறது. அதுவும் மாலையில் அலுவலகத்தில் இருந்து மக்கள் கிளம்பும் நேரத்தில் தான் சொல்லி வைத்தது போன்று மழை பெய்கிறது.
மழை என்றால் பெங்களூர்வாசிகள் டென்ஷனாக இவை தான் காரணம்,

போக்குவரத்து நெரிசல்
நல்ல காலத்திலேயே பெங்களூரில் போக்குவரத்து நெரிசலாக இருக்கும். இந்நிலையில் மழை பெய்துவிட்டால் சொல்லவே வேண்டாம். 5 கிலோமீட்டர் தூரத்தை நீங்கள் 1 மணிநேரத்தில் பயணித்தாலும் ஆச்சரியப்படுவதற்கு இல்லை. 15 நிமிடம் தொடர்ந்து மழை பெய்தால் போதும் பல இடங்களில் முதல்வன் படம் போன்று போக்குவரத்து நெரிசல் ஏற்படும். இது மிகையல்ல.

சாக்கடை
மழை பெய்யும் போது எல்லாம் சாக்கடைகள் நிரம்பி வழிந்து சாலை எல்லாம் கழிவுநீர் ஓடும். இதனால் இரு சக்கர வாகன ஓட்டிகள் மழையில் நனைந்து கொண்டு செல்கையில் சாக்கடை நீரால் சங்கடப்படுகிறார்கள்.

நீர் தேக்கம்
பெரிய ஐடி நகரமான பெங்களூரின் பெரும்பாலான பகுதிகளில் சாலைகள் குறுகியவை. அதும் குண்டும், குழியுமாக வேறு இருக்கும். இந்நிலையில் மழை பெய்தால் சாலைகளில் நீர் தேங்கி அந்த குழிகள் இருக்கும் இடம் தெரியாமல் போகும். இந்த காரணத்தால் இரு சக்கர வாகன ஓட்டிகள் நீர் தேங்கியுள்ள குழிகளில் விழுந்து காயம் அடைகிறார்கள்.

மின்தடை
வானம் இருட்டிக் கொண்டு லேசாக இரண்டு தூரல் வந்தால் போதும் உடனே மின்தடை ஏற்படும். செவ்வாய்க்கிழமை இரவு பெங்களூரின் சில பகுதிகளில் நான்கரை மணிநேரம் மின்தடை ஏற்பட்டது. இதனால் மக்கள் தூங்க முடியாமல் அவதிப்பட்டனர்.

நடந்து செல்பவர்கள்
மழை காலங்களில் சாலையில் நடந்து செல்பவர்களின் நிலைமை மிகவும் பரிதாபமானது. மழை நீர் தேக்கம் மற்றும் சாக்கடையை தவிர்க்க இரு சக்கர வாகன ஓட்டிகள் சாலையில் கண்ட பக்கம் எல்லாம் செல்வதால் மக்கள் நடந்து செல்ல அவதிப்படுகிறார்கள். நடந்து செல்பவர்களுக்காக சாலையோரம் கட்டி வைக்கப்பட்டுள்ள பகுதியிலும் இரு சக்கர வாகன ஓட்டிகள் செல்வதால் கால்நடையாக செல்பவர்களின் நிலை பரிதபாமோ பரிதாபம்.
-
அடுத்த 3 மணி நேரம்.. தேனி டூ குமரி வரை.. 10 மாவட்டங்களில் விட்டு விளாசப் போகுது மழை.. வானிலை அலர்ட் -
வங்கக்கடலில் நடந்த மாற்றம்.. இடி, மின்னலுடன் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம் -
Heavy Rain: இன்னைக்கு நைட் புல்லா மழை வெளுக்க போகுது.. கோவை டூ குமரி வரை 22 மாவட்டங்களுக்கு அலர்ட் -
சல்லி சல்லியாக நொறுங்கிடுச்சே.. துபாய் அஸ்திவாரமே ஆடுதுங்க.. 'சொர்க்க பூமி' இப்படி ஆகிடுச்சே! -
எனக்கு நயன்தாரா வேணும்.. ஸ்டாலின் கனவை நிறைவேற்றுவாரா சி.வி சண்முகம் சர்ச்சை பேச்சு -
திருவள்ளூர் மக்கள் ஏக்கத்துடன் பார்த்த பல ஆண்டு கனவு... ரயில் நிலையத்தில் பார்த்துமே பெரு மகிழ்ச்சி -
தவெக அருண்ராஜ் படத்துடன்.. வாக்காளர்களுக்கு விநியோகம் செய்ய இருந்த சில்வர் பாத்திரங்கள் பறிமுதல்! -
என்னது துணை முதலமைச்சர் பதவி தராங்களா.. விஜய் தான் முதலமைச்சர்.. செங்கோட்டையன் தடாலடி -
அமெரிக்க கடற்படை உலகிலேயே மிகவும் சக்தி வாய்ந்தது.. ஏன் ஹார்முஸ் ஜலசந்தியை பாதுகாக்க முடியவில்லை? -
கொட்டிய ஆலங்கட்டி மழை.. கோவை, ஈரோடு, திருப்பூர் மாவட்டங்களில் ஐஸ் மழை பெய்ததால் மக்கள் மகிழ்ச்சி! -
"இது" இல்லை என்றால் சிலிண்டர் வராது! புக்கிங் விதிகளை திடீரென மாற்றிய மத்திய அரசு! முக்கிய அறிவிப்பு -
இப்போ வேண்டாம்.. தேர்தலுக்கு பின் ஆதரவு தருகிறேன்.. சிஎம் போஸ்ட் தாங்க.. பாஜகவிடம் பேசிய விஜய்?











Click it and Unblock the Notifications