அய்யய்யோ மழை காலம் வந்துடுச்சே: கவலையில் பெங்களூர்வாசிகள்
பெங்களூர்: பெங்களூர் மக்களுக்கு மழை காலம் வந்தாலே கூடவே எரிச்சலும், அலுப்பும் வந்துவிடுகிறது. அதற்கு காரணம் இல்லாமல் இல்லை.
கர்நாடக மாநிலம் பெங்களூரில் கடந்த சில நாட்களாக மாலை நேரமாகிவிட்டால் வான் இருட்டிக் கொண்டு வந்து மழை கொட்டு கொட்டு என கொட்டித் தீர்க்கிறது. அதுவும் மாலையில் அலுவலகத்தில் இருந்து மக்கள் கிளம்பும் நேரத்தில் தான் சொல்லி வைத்தது போன்று மழை பெய்கிறது.
மழை என்றால் பெங்களூர்வாசிகள் டென்ஷனாக இவை தான் காரணம்,

போக்குவரத்து நெரிசல்
நல்ல காலத்திலேயே பெங்களூரில் போக்குவரத்து நெரிசலாக இருக்கும். இந்நிலையில் மழை பெய்துவிட்டால் சொல்லவே வேண்டாம். 5 கிலோமீட்டர் தூரத்தை நீங்கள் 1 மணிநேரத்தில் பயணித்தாலும் ஆச்சரியப்படுவதற்கு இல்லை. 15 நிமிடம் தொடர்ந்து மழை பெய்தால் போதும் பல இடங்களில் முதல்வன் படம் போன்று போக்குவரத்து நெரிசல் ஏற்படும். இது மிகையல்ல.

சாக்கடை
மழை பெய்யும் போது எல்லாம் சாக்கடைகள் நிரம்பி வழிந்து சாலை எல்லாம் கழிவுநீர் ஓடும். இதனால் இரு சக்கர வாகன ஓட்டிகள் மழையில் நனைந்து கொண்டு செல்கையில் சாக்கடை நீரால் சங்கடப்படுகிறார்கள்.

நீர் தேக்கம்
பெரிய ஐடி நகரமான பெங்களூரின் பெரும்பாலான பகுதிகளில் சாலைகள் குறுகியவை. அதும் குண்டும், குழியுமாக வேறு இருக்கும். இந்நிலையில் மழை பெய்தால் சாலைகளில் நீர் தேங்கி அந்த குழிகள் இருக்கும் இடம் தெரியாமல் போகும். இந்த காரணத்தால் இரு சக்கர வாகன ஓட்டிகள் நீர் தேங்கியுள்ள குழிகளில் விழுந்து காயம் அடைகிறார்கள்.

மின்தடை
வானம் இருட்டிக் கொண்டு லேசாக இரண்டு தூரல் வந்தால் போதும் உடனே மின்தடை ஏற்படும். செவ்வாய்க்கிழமை இரவு பெங்களூரின் சில பகுதிகளில் நான்கரை மணிநேரம் மின்தடை ஏற்பட்டது. இதனால் மக்கள் தூங்க முடியாமல் அவதிப்பட்டனர்.

நடந்து செல்பவர்கள்
மழை காலங்களில் சாலையில் நடந்து செல்பவர்களின் நிலைமை மிகவும் பரிதாபமானது. மழை நீர் தேக்கம் மற்றும் சாக்கடையை தவிர்க்க இரு சக்கர வாகன ஓட்டிகள் சாலையில் கண்ட பக்கம் எல்லாம் செல்வதால் மக்கள் நடந்து செல்ல அவதிப்படுகிறார்கள். நடந்து செல்பவர்களுக்காக சாலையோரம் கட்டி வைக்கப்பட்டுள்ள பகுதியிலும் இரு சக்கர வாகன ஓட்டிகள் செல்வதால் கால்நடையாக செல்பவர்களின் நிலை பரிதபாமோ பரிதாபம்.
-
தமிழகத்தில் இன்று 21 மாவட்டங்களில் கனமழை வெளுக்கும்.. சென்னைக்கும் அலர்ட் விடுத்த வானிலை ஆய்வு மையம் -
ராணிப்பேட்டை டூ தேனி வரை.. 16 மாவட்டங்களில் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம் -
கருணை காட்டுவாரா வருண பகவான்.. சென்னை, செங்கல்பட்டில் சட்டென மாறிய வானிலை -
இன்னும் 3 நாள் தான்.. வரப் போகுது தென்மேற்குப் பருவமழை! ஜில்ஜில் கிளைமேட்டுக்கு ரெடியாகுங்க மக்களே! -
பெங்களூர்: என்னடா அநியாயம் பண்றீங்க.. வீட்டு வாடகை ரூ.1.1 லட்சமா.. அதிர்ச்சியில் ஐடி ஊழியர்கள்! -
IPL 2026: அடேங்கப்பா..! ஐபிஎல் பரிசுத்தொகை எவ்வளவு? வைபவ் சூர்யவன்ஷி காட்டில் கொட்டிய பணமழை! -
நள்ளிரவில் ஜொலிக்கும் பெங்களூர்.. RCB வெற்றியால் ரசிகர்கள் செய்த சம்பவம்.. இந்த வீடியோ பாருங்க -
அலப்பறைக்கு ரெடியான RCB ரசிகர்கள்.. பெங்களூரில் மேம்பாலங்களை மூடும் போலீசார்.. பின்னணி இதுதான் -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ!












Click it and Unblock the Notifications