Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

"சீதா, அக்பர்".. சிங்கங்களுக்கு பெயர் சூட்டியதில் உங்களுக்கு என்ன பிரச்சினை?.. நீதிபதி காட்டம்

Subscribe to Oneindia Tamil

கொல்கத்தா: சிங்கத்திற்கு சீதா என பெயர் சூட்டுவதில் உங்களுக்கு என்ன பிரச்சினை என விஷ்வ இந்து பரிஷத் தொடர்ந்த வழக்கில் கொல்கத்தா நீதிமன்ற நீதிபதி காட்டமாக கேள்வி எழுப்பியுள்ளார்.

மேற்கு வங்க உயிரியல் பூங்காவில் பெண் சிங்கத்திற்கு சீதா என்றும் ஆண் சிங்கத்திற்கு அக்பர் என்றும் பெயர் சூட்டப்பட்டுள்ளது. இது பெரும் சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில் தங்கள் மத உணர்வுகளை புண்படுத்துவதாக கூறி கொல்கத்தா உயர்நீதிமன்றத்தில் விஷ்வ இந்து பரிஷத் எனும் இந்து அமைப்பு வழக்கு தொடர்ந்தது.

What does it matter for naming a lioness Sita?, Calcutta Hc asks VHP

இதுகுறித்து அந்த வழக்கில் கூறியிருப்பதாவது: பிப்ரவரி 12 ஆம் தேதி விலங்கு பரிமாற்ற திட்டத்தின் ஒரு பகுதியாக திரிபுராவின் செபாஹிஜாலா உயிரியல் பூங்காவில் இரு சிங்கங்கள், 8 விலங்குகளுடன் சிலிகுரி உயிரியல் பூங்காவிற்கு கொண்டு வரப்பட்டன.

அதில் 7 வயதுள்ள ஆண் சிங்கத்திற்கு அக்பர் என்றும் 6 வயதுள்ள பெண் சிங்கத்திற்கு சீதா என்றும் பெயர் சூட்டப்பட்டுள்ளது. அக்பர் என்பது முகலாய மன்னரின் பெயராகும். சீதா என்பது ராமாயணத்தில் ஸ்ரீராமனின் மனைவி சீதா தேவியின் பெயராகும். எனவே இந்த இரு சிங்கங்களையும் ஒரே இடத்தில் வைப்பது இந்து மதத்தை அவமதிக்கும் விஷயம்.

சிங்கத்திற்கு இந்து மத தெய்வமான சீதையின் பெயரை வைத்திருப்பது பகுத்தறிவற்றது, நியாயமே இல்லை, மூர்க்கத்தனமான வகையில் பெயரிட்டு மத உணர்வுகளை புண்படுத்தியுள்ளார்கள். நாளைக்கு கழுதைக்கு வேறு ஒரு தெய்வத்தின் பெயரை வைப்பர். எங்கள் சீதாதேவியை கோவிலில் வழிபட வேண்டும். அடர்ந்த காடுகளில் அல்ல.

மத தெய்வங்களின் பெயரை விலங்குகளுக்கு பெயரிடுவது புனிதமற்றது என இந்து அமைப்பு தனது மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த நிலையில் இந்த வழக்கானது விசாரணைக்கு வந்தது. இதை கொல்கத்தா உயர்நீதிமன்ற நீதிபதி சவுகதா பட்டாச்சாரியா விசாரித்தார். அப்போது அவர் கூறுகையில் சிங்கத்திற்கு பெயர் வைப்பதை எப்படி எடுத்துக் கொள்வது என்பது ஒவ்வொரு நபரின் எண்ண ஓட்டத்தை பொருத்ததாகும்.

துர்கையின் வாகனமாக இருக்கும் சிங்கத்தையும் துர்கா பூஜையின் போது அனைவரும் வழிபடுகிறார்கள். துர்கையின் காலடியில் சிங்கம் இருப்பதை நீங்க பார்த்துள்ளீர்களா இல்லையா? என நீதிபதி கேள்வி எழுப்பினார். அதற்கு விஎச்பி சார்பில் ஆஜரான வழக்கறிஞர், துர்கையின் பாதங்களில் சிங்கம் இருப்பது அனைத்து பகுதியில் இருந்தும் கெட்ட சக்திகளை தடுப்பதற்காகத்தான். அதற்கென எந்த பெயரையும் வைத்து அழைப்பதில்லை.

நீங்கள் சொல்வது போல் இல்லை. துர்கா பூஜையின் போது நாங்கள் வழிபடுவது துர்க்கையை மட்டும்தான். சிங்கத்தை அல்ல என்றார். இதற்கு நீதிபதி சவுகதா பதிலளிக்கையில் நீங்கள் வழிபடாவிட்டாலும் அந்த ஒட்டுமொத்த பூஜையிலும் சிங்கம் இருக்கிறதே! சிங்கத்திற்கு சீதா என்ற பெயரை வைத்ததால் உங்களுக்கு என்ன பிரச்சினை, இதனால் எப்படி மத உணர்வு புண்படும்? அன்பின் பெயரில் கூட அந்த பெயரை வைத்திருக்கலாமே என நீதிபதி சவுகதா அடுக்கடுக்கான கேள்விகளை எழுப்பியிருந்தார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+