மூணாறில் மும்பை பெண் ஜாலி சுற்றுலா .. கசப்பான அனுபவம் .. டாக்சி டிரைவர்கள் 3 பேர் கைது
மூணாறு: கேரளாவின் புகழ் பெற்ற சுற்றுலா தலமான மூணாறுக்கு மும்பையை சேர்ந்த பெண் அண்மையில் சுற்றுலா வந்துள்ளார். அவருக்கு டாக்சி டிரைவர்களால் கசப்பான சம்பவம் நடந்ததாக கூறப்படுகிறது. இது பற்றி அந்த மும்பை பெண் வீடியோ வெளியிட்டு நடவடிக்கை எடுக்குமாறு கோரினார். இந்த விவகாரத்தில் 3 டாக்சி டிரைவர்கள் அதிரடியாக கைது செய்யப்பட்டிருக்கிறார்கள். என்ன நடந்தது என்பதை இப்போது பார்ப்போம்.

கேரள மாநிலம் மூணாறு இந்தியாவின் புகழ்பெற்ற சுற்றுலா தலங்களில் ஒன்று. கேரளாவிற்கு வரும் பலரும் மூணாறு சுற்றுலா செல்வது வழக்கம். மூணாறில் தேயிலை தோட்டங்கள், மனதை மயக்கும் அழகிய காடுகள் , ஏராளமான வனவிலங்குகள் ஆண்டு முழுவதும் குளுகுளுடன் காலநிலை மிக அழகான சாலைகள் என அற்புதமாக இருக்கும். கடவுளின் தேசமான மூணாறில் ஒவ்வொரு நாளும் பல்வேறு மாநில சுற்றுலா பயணிகள் சுற்றுலாவிற்காக வருகிறார்கள் . அப்படித்தான் மும்பையைச் சேர்ந்த கல்லூரி பேராசிரியை ஜான்வி கடந்த அக்டோபர் 30-ந்தேதி கேரள மாநிலம் மூணாறுக்கு சுற்றுலா வந்தார். பின்னர் அங்கிருந்து எர்ணாகுளம் செல்வதற்காக ஆன்லைன் மூலம் வாடகை கார் ஒன்றை பதிவு செய்துள்ளார். அவர் வாடகை காரன் முன்பதிவு செய்த சிறிது நேரத்தில் அவரை ஏற்றிச்செல்வதற்காக கார் அங்கு வந்தது. அப்போது அங்கு மூணாறை சேர்ந்த டாக்சி டிரைவர்கள் சிலர் வந்து, ஜான்வியிடம் ஆன்லைன் மூலம் வாடகை கார் பதிவு செய்து பயணம் செய்யக்கூடாது என்று கடுமையாக வாக்குவாதம் செய்தார்களாம்., மூணாறை சேர்ந்த டாக்சி கார்கள் மூலமே செல்ல வேண்டும் என்று கூறி அவரை மிரட்டினார்களாம். இதனால் பயந்து போன அவர், , மூணாறு போலீசாருக்கு தகவல் தெரிவித்தார். அதன்பேரில் அங்கு 2 காவலர்கள் வந்தனர். ஆனால் அவர்களும், மூணாறு டாக்சி கார் டிரைவர்களுக்கு ஆதரவாக செயல்பட்டதாக கூறப்படுகிறது.
பின்னர் நீண்ட பேச்சு வார்த்தைக்கு பின்னர், ஒரு வழியாக ஜான்வி அவர் ஆன்லைனில் பதிவு செய்த வாடகை காரில் எர்ணாகுளம் சென்று அங்கிருந்து ரயில் மூலம் மும்பை திரும்பினார். இதற்கிடையே ஜான்வி தனது சமூக வலைத்தள பக்கத்தில் ஒரு வீடியோ வெளியிட்டு புகார் தெரிவித்தார். அதில், மூணாறில் எனக்கு டாக்சி டிரைவர்களால் கசப்பான அனுபவம் ஏற்பட்டதாக நடந்த சம்பவங்களை விரிவாக விவரித்தார்.. இதுபோல் அச்சுறுத்தல் இனி யாருக்கும் நடக்க கூடாது. இனிமேல் நான் கேரளாவுக்கு ஒருபோதும் சுற்றுலா வரமாட்டேன் என்று கூறியிருந்தார்.
ஜான்வியின் இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலானது. இதையடுத்து இந்த சம்பவத்தில் அலட்சியமாக செயல்பட்டதாக சப்-இன்ஸ்பெக்டர் சாஜூ பவுலோஸ், காவலர் ஜார்ஜ் குரியன் ஆகியோரை பணியிடை நீக்கம் செய்து போலீஸ் உயர் அதிகாரிகள் உத்தரவிட்டனர்.
இந்தநிலையில் மும்பை பெண்ணிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டதாக மூணாறை சேர்ந்த டாக்சி கார் டிரைவர்களான லாக்காடு எஸ்டேட் பகுதியை சேர்ந்த 40 வயதாகும் விஜயகுமார் , மூணாறு தென்மலை எஸ்டேட் பகுதியை சேர்ந்த 44 வயதாகும் விநாயகன் (க்ஷ, மூணாறை சேர்ந்த 40 வயதாகும் அனீஷ்குமார் ஆகியோரை மூணாறு போலீசார் கைது செய்தனர். இந்த சம்பவம் மூணாறில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது .
-
டெல்லி தந்த கிரீன் சிக்னல்.. 4 வழியாக மாறும் தமிழ்நாட்டின் மூன்று முக்கிய சாலைகள்.. மெகா பிளான்! -
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
1 சவரன் தங்க நகை வாங்க போறீங்களா? கடைக்காரர் போடும் கணக்கில் அதிக மாற்றமா? ஏமாறாமல் இருக்க பில் தேவை -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு? -
அதை சொல்ல யாருக்கும் அருகதை இல்லை.. வீட்டிலும், ஆபீஸிலும் இதுதான் நடக்குது செல்வராகவன் ஆதங்கம் -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
48 அவுட் ஆஃப் 234! திமுக கூட்டணியில் இதுவரை எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை சீட் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000! -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி












Click it and Unblock the Notifications