புதிதாக சம்மனே அனுப்பாமல் சிபிஐ கைது செய்தது ஏன்?- நீதிமன்றத்தில் கார்த்தி சிதம்பரம் தரப்பு வாதம்
டெல்லி: கார்த்தி சிதம்பரத்தை சிபிஐ கைது செய்ய வேண்டிய தேவையே எழவில்லை என்று பட்டியாலா நீதிமன்றத்தில் அவர் சார்பில் ஆஜரான அபிஷேக் சிங்வி வாதிட்டார்.
ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில், கைது செய்யப்பட்ட கார்த்தி சிதம்பரம், டெல்லி பட்டியாலா நீதிமன்றத்தில் நேற்று ஆஜர்படுத்தப்பட்டார். 15 நாட்கள் காவல் அளிக்க சிபிஐ கோரியது. ஆனால் 1 நாள் காவல் வழங்கியது நீதிமன்றம்.

இன்று மீண்டும் கார்த்தி சிதம்பரம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். நேற்று இரவு முழுக்க, மருத்துவர் பரிந்துரைப்படி, அவர் மருத்துவமனையில் இருந்ததாகவும், எனவே, சிபிஐயால் கார்த்தி சிதம்பரத்திடம் விசாரணை நடத்த முடியவில்லை என்றும், நீதிமன்றத்தில் சிபிஐ தரப்பு வழக்கறிஞர் துஷ்கர் மேத்தா தெரிவித்தார்.
எனவே கார்த்தி சிதம்பரத்தை மேலும் 14 நாட்கள் காவலில் வைத்து விசாரிக்க அனுமதி வழங்க வேண்டும் என்று அவர் வழக்கறிஞர் கோரிக்கைவிடுத்தார்.
கார்த்தி சிதம்பரம் சார்பில் அபிஷேக் சிங்வி வாதிடுகையில், உள்நோக்கத்துடன் கார்த்தி சிதம்பரம் மீது சிபிஐ வினோத வழக்கு தொடரப்பட்டுள்ளதாக குற்றம்சாட்டினார். மேலும் அவர் வாதிட்டதாவது: 2017 ஆகஸ்ட் மாதத்திற்கு பிறகு கார்த்தி சிதம்பரத்திற்கு சிபிஐ எந்த சம்மனும் அனுப்பவில்லை
புது சம்மன் எதுவும் வழங்காமல், கார்த்தியை கைது செய்யவேண்டிய அவசியம் என்ன வந்தது? கார்த்தியை கைது செய்தது ஏன் என சிபிஐ விளக்க வேண்டும். இவ்வாறு அவர் வாதிட்டார்.
மேலும், இந்திராணி முகர்ஜி அமலாக்கத்துறை அதிகாரிகளிடம் கூறியதாக கூறப்படும், வாக்குமூலம் சில மீடியாக்கள் மூலமாக கசியவிடப்பட்டுள்ளதாக அபிஷேக் சிங்வி தெரிவித்தார். இதை சிபிஐ வழக்கறிஞர், ஆதாரமற்ற குற்றச்சாட்டு என மறுத்தார்.
இதனிடையே, கார்த்தி சிதம்பரத்துக்கு எதிரான ரகசிய ஆவணங்களை நீதிமன்றத்தில் சிபிஐ தாக்கல் செய்துள்ளது. ஆதாரங்கள் திருப்தி அளித்தால் கார்த்தியை விசாரிக்க அனுமதிக்க வேண்டும் என்றும் சிபிஐ தரப்பு கோரியுள்ளது.
-
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்!












Click it and Unblock the Notifications