"மேஜிக் நம்பர் யாருக்கு!" நிதிஷ் பாஜக பக்கம் சாய்ந்தால் சமாளிப்பாரா லாலு? பீகார் கள நிலவரம்தான் என்ன
டெல்லி: பீகார் சட்டசபையில் இப்போது யாருக்கு எத்தனை இடம் இருக்கிறது.. அங்கே நிலவும் அரசியல் சூழல் என்ன.. அடுத்து என்ன நடக்க வாய்ப்பு இருக்கும் என்பது குறித்து நாம் பார்க்கலாம்.
243 உறுப்பினர்களைக் கொண்ட பீகார் சட்டசபையில் தற்போது ஜேடியு, ஆர்ஜேடி, காங்கிரஸ் மற்றும் இடதுசாரிகள் இணைந்து உருவாக்கிய மகா பந்தன் கூட்டணி ஆட்சியில் இருக்கிறது. இந்த கூட்டணியில் இருந்து நிதிஷ்குமார் வெளியேறினால் அவர்களுக்குப் பெரும்பான்மைக்குத் தேவையான இடங்கள் கிடைக்காது.

பீகார் சட்டசபையைப் பொறுத்தவரை இப்போது 79 எம்எல்ஏக்களுடன் லாலு பிரசாத் யாதவின் ஆர்ஜேடி தனிப்பெரும் கட்சியாக இருக்கிறது. அவர்களை விட ஒரு இடம் குறைவாக அதாவது 78 எம்எல்ஏக்களுடன் பாஜக இரண்டாவது பெரிய கட்சியாக இருக்கிறது. 45 எம்எல்ஏக்களுடன் நிதிஷ்குமாரின் ஜேடியு மூன்றாவது இடத்திலும் உள்ளது.
நிதிஷ்குமார்: 2020 சட்டசபைத் தேர்தலில் பாஜகவுடன் இணைந்து நிதிஷ்குமார் தேர்தலை எதிர்கொண்டார். அப்போது ஜேடியு கட்சியைக் காட்டிலும் பாஜகவை அதிக இடங்கள் பெற்ற போதிலும், கூட்டணி ஒப்பந்தத்தின்படி, நிதிஷ் குமார் பீகார் முதல்வரானார். இரண்டு ஆண்டுகள் கழித்து 2022இல் நிதிஷ்குமார் பாஜக கூட்டணியை முறித்துக் கொண்டு, ஆர்ஜேடி, காங்கிரஸ் கூட்டணியில் ஆட்சியை அமைத்தார்.
இப்போது இரண்டு ஆண்டுகள் கழித்து அவர் மீண்டும் பாஜக பக்கம் செல்லவுள்ளதாகக் கூறப்படுகிறது. இந்தத் தகவல்களை நிதிஷ்குமார் தரப்பு உறுதி செய்யவும் இல்லை.. அதேநேரம் மறுக்கவும் இல்லை. பீகார் அரசியலில் தற்போதைய நிலை என்ன என்பது நாளை தெரிந்துவிடும்.
யாருக்கு எத்தனை இடம்: பீகாரை பொறுத்தவரை லாலு பிரசாத் யாதவின் ஆர்ஜேடி கட்சிக்கு 79 இடங்கள் உள்ளன. அடுத்து 78 இடங்களுடன் பாஜக இரண்டாவது இடத்தில் இருக்கும் நிலையில், நிதிஷ்குமாரின் ஆர்ஜேடி 45 இடங்கள் உள்ளன. தொடர்ந்து காங்கிரஸ் (19 சீட்கள்) சிபிஐ எம்எல் (எல்) (12 சீட்கள்), இந்துஸ்தானி அவாம் மோர்ச்சா (4 சீட்கள்), சிபிஐ (எம்) (2 சீட்கள்), சிபிஐ (2 சீட்கள்), மஜ்லீஸ் (1 சீட்), சுயேச்சைகள் (1 சீட்) உள்ளன.
பீகாரில் பெரும்பான்மைக்குக் குறைந்தது 122 இடங்கள் தேவை.. தற்போது பீகாரில் ஆளும் மகா பந்தன் கூட்டணிக்கு 159 எம்எல்ஏக்கள் உள்ளனர். இருப்பினும், நிதிஷ்குமார் கூட்டணியில் இருந்து வெளியே சென்றால் இந்த எண்ணிக்கை 114ஆகக் குறையும். அப்போது ஆட்சி கவிழும். அதேநேரம் பாஜக- ஜேடியு இணைந்தால் அவர்கள் பலம் 123ஆக இருக்கும். இதுபோக பாஜகவுக்கு இந்துஸ்தானி அவாம் மோர்ச்சா ஆதரவும் இருக்கும் என்று கூறப்படுகிறது.
இங்கே என்ன நிலை: மறுபுறம் ஆர்ஜேடி- காங்கிரஸ் கூட்டணிக்குப் பெரும்பான்மைக்கு 8 எம்எல்ஏக்கள் தேவை. இந்துஸ்தானி அவாம் மோர்ச்சாவுக்கு 4 எம்எல்ஏக்கள் இருக்கும் நிலையில், அவர்கள் கூட்டணிக்கு வந்தால் துணை முதல்வர் லாலு பிரசாத் யாதவ் கூறியிருக்கிறார். அவர்கள் உள்ளே வரும் பட்சத்தில் 4 எம்எல்ஏக்கள் ஆதரவு மட்டுமே தேவைப்படும். மஜ்லீஸ் கட்சி, சுயேச்சை எம்எல்ஏ ஒருவர் ஆதரவும் கிடைத்தாலும் கூட 2 சீட்கள் குறைவாகவே இருக்கும்.
பீகார் மாநிலத்தில் இப்போது களநிலவரம் இப்படி தான் இருக்கிறது. நிதிஷ்குமார் கூட்டணியில் இருந்து வெளியேறினால் தற்போதுள்ள அரசு கவிழும் சூழலே இருக்கிறது. அங்கே வரும் நாட்களில் என்ன நடக்கும் என்பதைப் பொறுத்து இருந்து தான் பார்க்க வேண்டும்.
-
இந்தியாவுக்கு ஆப்பு வைக்கும் ரஷ்யா.. கச்சா எண்ணெய் விலையில் இனி சலுகை இல்லை? நேரம் பார்த்து அடிக்கும் புதின் -
Next CM: தமிழகத்தில் ஆட்சியை பிடிப்பது யார் தெரியுமா? சித்தர் கணிப்பை பாருங்க! அப்போ விஜய்? -
அல்வா மாதிரி அள்ளிகிட்டு போன அண்ணியார்.. ஏக கடுப்பில் மாஜி மக்கள் நலக் கூட்டணி! திமுகவுக்கு சிக்கல்? -
எடப்பாடி கோட்டையில் திமுகவுக்கு ஷாக்! அதிமுகவுக்கு தாவிய முன்னாள் எம்.எல்.ஏ! -
கூட்டணியில் சொதப்பிய ஆதவ் அர்ஜுனா.. கண் சிவந்த விஜய்.. தவெகவில் உச்சகட்ட மோதல் -
வசமாக சிக்கும் டிரம்ப்.. ஈரான் கப்பல் தாக்கப்பட்ட விஷயத்தில் பெரிய மிஸ்டேக்! ரவுண்டு கட்டும் சட்டம் -
ட்விஸ்ட்! அதிமுக கூட்டணியில் தவெக? 40 சீட் தர எடப்பாடி தயார்! விஜய்க்கு வேற வழியே இல்லையா? -
விசிக முதல் தேமுதிக வரை.. திமுக கூட்டணியில் போர்க்கொடி உயர்த்திய 6 கட்சிகள்.. தொகுதி பங்கீட்டில் இழுபறி -
டிரம்ப்பை ஒன்றுகூடி அடிக்கும் வளைகுடா நாடுகள்.. அமெரிக்காவுக்கு பெரிய செக்! எதிர்பார்க்கவே இல்லை -
அமெரிக்க பாதுகாப்பில் பெரிய ஓட்டை! கச்சிதமாக வேலையை முடித்த ஈரான்! சீனா சொன்ன மேட்டர்! -
உலகப்போர் 3.. கிளைமேக்ஸை நோக்கிச் செல்கிறது ஈரான் போர்.. அமெரிக்கா கையில் எடுக்கும் அணுகுண்டு! -
எக்சிட் பிளான் இல்லை.. டிரம்பிற்கு 'நரகமாக' மாறும் ஈரான்.. அணு ஆயுதத்தை கையில் எடுக்கும் அமெரிக்கா!












Click it and Unblock the Notifications