அமைச்சர் நெருக்கடி.. பெண் டிஎஸ்பி ராஜினாமா கடிதத்தை ஏற்றது கர்நாடக அரசு
Subscribe to Oneindia Tamil
பெங்களூர்: அமைச்சருடன் ஏற்பட்ட மோதலால் பதவியை துறந்த கர்நாடக பெண் டிஎஸ்பி அனுபமா ஷெனாய் ராஜினாமாவை அரசு திடீரென ஏற்றுக்கொண்டுள்ளது.
ராஜினாமா கடிதத்தை ஏற்காமல் காத்திருப்பு பட்டியலில் வைத்திருந்த அரசு நேற்று திடீரென இம்முடிவை எடுத்தது. முதல்வர் சித்தராமையா, உள்துறை அமைச்சர் பரமேஸ்வர் ஆகியோர் நடத்திய ஆலோசனைக்கு பிறகு இந்த முடிவு எடுக்கப்பட்டது.

ராஜினாமா கடிதத்தை ஏற்காமல் மீண்டும் பதவியில் தொடர செய்தால் தவறான முன் உதாரணமாகிவிடும் என்ற அச்சத்தால் அரசு அக்கடிதத்தை ஏற்றுக்கொண்டுள்ளதாக தெரிகிறது.
பெல்லாரி மாவட்ட பொறுப்பு அமைச்சர் பரமேஸ்வர நாயக் மற்றும் அம்மாவட்ட டிஎஸ்பி அனுபமா ஷெனாய் நடுவே ஏற்பட்ட பனிப்போர்தான் அவரது திடீர் ராஜினாமாவுக்கு காரணம் என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications