சப்போஸ், பவானிசிங் நியமனம் செல்லாதுன்னு உச்சநீதிமன்றம் சொன்னா, ஜெ. வழக்கு கதி?
பெங்களூரு: ஜெயலலிதாவின் மேல்முறையீட்டு மனு மீதான விசாரணையில், அரசு வழக்கறிஞராக பவானிசிங் ஆஜராவதை எதிர்த்து தி.மு.கவின் அன்பழகன் தொடர்நத வழக்கில், ஒருவேளை திமுகவுக்கு சாதகமாக தீர்ப்பு வந்தால் என்னவெல்லாம் நடக்கும் தெரியுமா..
சொத்துக்குவிப்பு வழக்கில், சிறப்பு நீதிமன்றம் விதித்த தண்டனையை எதிர்த்து ஜெயலலிதா உள்ளிட்ட நான்கு குற்றவாளிகளும், கர்நாடக ஹைகோர்ட்டில் வழக்கு தொடர்ந்துள்ளனர். தனி நீதிபதி குமாரசாமி முன்னிலையில், இந்த வழக்கு விசாரணை நடந்து வருகிறது.

நியமிக்காமலேயே ஆஜரான பவானி
இவ்வழக்கில், அரசு தரப்பு வக்கீலாக, பவானிசிங் ஆஜராகிறார். இவர் சிறப்பு நீதிமன்றத்திலும் அரசு வக்கீலாக ஆஜரானவராகும். ஆனால், ஹைகோர்ட்டில் பவானிசிங் உட்பட யாரையுமே இதுவரை அரசு வக்கீலாக கர்நாடக அரசு நியமிக்கவில்லை.

உச்சநீதிமன்றம் விசாரணை
எனவே, பவானிசிங் ஆஜரானது தவறு, அவரை அரசு வக்கீல் பொறுப்பில் இருந்து நீக்க வேண்டும் என்று திமுகவின் அன்பழகன் சார்பில் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இதனிடையே ஹைகோர்ட்டில், அப்பீல் மனு மீது விசாரணை முடிந்து தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் ஒத்தி வைத்துள்ளார் நீதிபதி குமாரசாமி.

ஹைகோர்ட் தீர்ப்பளிக்க தடை
உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பை பொறுத்து தீர்ப்பு தேதியை குமாரசாமி அறிவிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதனிடையே, அன்பழகன் மனுவை விசாரித்த உச்சநீதிமன்ற பெஞ்ச், தீர்ப்பை இம்மாதம் 15ம்தேதி அறிவிக்க உள்ளதாகவும், அதுவரையில், மேல்முறையீட்டு வழக்கு தொடர்பான தீர்ப்பை ஹைகோர்ட் வெளியிட கூடாது என்றும் அறிவித்தது.

சரின்னா ஓகே, இல்லைன்னா?
பவானிசிங் ஆஜரானது சரிதான் என்று உச்சநீதிமன்றம் தனது தீர்ப்பில் கூறினால், அதன்பிறகு ஹைகோர்ட் தனது தீர்ப்பை வெளியிடுவதற்கு தடை இருக்காது. வழக்கு அடுத்தகட்டத்துக்கு நகரும். ஒருவேளை, பவானிசிங் ஆஜரானது தவறு என்று தீர்ப்பு வெளியானால், அப்போது என்னவெல்லாம் நடக்கும் தெரியுமா..

புது வக்கீல் நியமனம்
ஒருவேளை உச்ச நீதிமன்றத்தில் பவானி சிங் நீக்கப்பட்டால், கர்நாடக அரசும் கர்நாடக உயர் நீதிமன்ற தலைமை நீதிபதியும் சேர்ந்து ஒரு புதிய அரசு வழக்கறிஞரை நியமிப்பார்கள். ஏப்ரல் 20ம் தேதி முதல் ஜூன் 1ம் தேதி வரை நீதிமன்றத்துக்கு கோடை விடுமுறை என்பதால், மேற்கொண்டு இந்த வழக்கு நடைபெறாது. அதன் பிறகு ஜூன் மாதத்தில் அரசு வழக்கறிஞர் நியமிக்கப்பட்டால், அவர் இந்த வழக்கு விவரங்களைப் படிப்பதற்கு எப்படியும் ஓரிரு மாதங்கள் வாய்தா கேட்பார். அதற்குள், ஆகஸ்ட் மாதம் வந்துவிடும்.

நீதிபதி ஓய்வு
அதில் ஒரு சிக்கல் ஏற்படும். ஆகஸ்ட் மாதத்தில் கர்நாடக தலைமை நீதிபதி வகேலாவும் இந்த வழக்கை விசாரிக்கும் நீதிபதி குமாரசாமியும் ஓய்வு பெறுகிறார்கள். அதன்பிறகு, வேறு சிறப்பு நீதிபதியை நியமிக்க வேண்டிவரும். அதற்குள் வருடமும் முடிந்துவிடும்.

தேர்தல் முக்கியமாச்சே..
இந்த இழுபறி, அதிமுகவினருக்கு கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. ஹைகோர்ட் இல்லாவிட்டால், உச்சநீதிமன்றத்தில் எப்படியும், வழக்கில் இருந்து மீண்டு வந்துவிடலாம் என்று நம்பிக்கொண்டிருக்கும், அதிமுகவினருக்கு, காலம் வீணாவது பிடிக்கவில்லை. ஏனெனில் வழக்கில் இருந்து வெளிவந்தால்தான், அடுத்த சட்டசபை தேர்தலை சந்திக்க ஜெயலலிதா முழு வீச்சில் களமிறங்க முடியும்.
-
கார் ஓட்டுநரின் மகனுக்கு சீட்! எங்கயோ இடிக்குதே! விஜய்யின் ரியல் எஸ்டேட் தொழில் குறித்து ஷாக் தகவல் -
மகளிர் உரிமை தொகை கிடைக்காது.. ஆனாலும் நாளை முதல் தமிழக அரசு தரும் ரூ.2000.. யாருக்கு வரும்? -
காற்றழுத்த தாழ்வு பாதை.. பிச்சு உதறப் போகும் மழை.. இடி, மின்னலுடன் கொட்டப் போகுது! -
திமுக-அதிமுக இடையே கடும் போட்டி.. ஆட்சியை பிடிப்பது யார்? ஆட்டத்திலேயே இல்லாத தவெக! புதிய சர்வே -
யார் அந்த அதிர்ஷ்டசாலி? நகைக்கடை, விவசாயக்கடன் தள்ளுபடி, மாதம் 10000 சலுகை? விவசாயிகளின் செம திட்டம் -
சொதப்பிட்டீங்களே.. இப்போ பாருங்க போக முடியல.. கடுப்பான விஜய்.. காரணம் புஸ்ஸி, ஆதவ்? என்னாச்சு? -
திடீரென வீடியோ வெளியிட்டு மதுரை மத்திய தொகுதி வேட்பாளர் சுந்தர் சி உருக்கம்! பிடிஆர் இருக்காரே! -
சிலிண்டர் ஏஜென்சி வைத்திருக்கும் நண்பனின் தந்தைக்கு மாதம் 1.90 லட்சம் வருமானம்.. நெட்டிசன் தகவல் -
Free Fridge: அதிமுகவின் இலவச பிரிட்ஜ்! யாருக்கெல்லாம் கிடைக்கும்? எவ்வளவு ரூபாய்க்கு இருக்கும்? -
எவ்வளவு வேகம்! சிட்டிக்கு நடுவே வளர்ந்து நிற்கும் ஸ்டீல் ராட்சசன்.. சென்னையின் காஸ்ட்லி ப்ராஜெக்ட் -
ஸ்டாலின் தான் சிறந்த CM வேட்பாளர்.. பின்னாலேயே துரத்தும் எடப்பாடி.. விஜய்க்கு அதிர்ச்சி! புதிய சர்வே -
தவெகவில் விஜய்க்கு அடுத்ததாக அதிக சொத்து உள்ள நபர் இவரா? அதுவும் இத்தனை கோடி! ஆச்சரியத்தில் நெட்டிசன்கள்












Click it and Unblock the Notifications