இவ்வளவு விஷயம் நடக்குமா? ஒருவேளை ஜம்மு காஷ்மீரை மூன்றாக பிரித்தால் என்ன ஆகும்.. முழு பின்னணி!
ஜம்மு காஷ்மீரை மூன்றாக பிரிப்பதன் மூலம் அரசியல் ரீதியில் நிறைய சாதகமான சூழ்நிலை உருவாகும் என்று மத்திய அரசு நினைக்கிறது.
ஸ்ரீநகர்: ஜம்மு காஷ்மீரை மூன்றாக பிரிப்பதன் மூலம் அரசியல் ரீதியில் நிறைய சாதகமான சூழ்நிலை உருவாகும் என்று மத்திய அரசு நினைக்கிறது.
மத்திய பாஜக அரசு ஜம்மு காஷ்மீர் மாநிலத்தை, ஜம்மு, காஷ்மீர், லடாக் என்று மூன்றாக பிரிக்க இருப்பதாக தகவல்கள் வருகிறது. இதற்காகத்தான் அங்கு ராணுவத்தை குவித்து வருவதாகவும் கூறுகிறார்கள்.
அதன்படி காஷ்மீருக்கு சிறப்பு அதிகாரத்தை அளித்துவிட்டு, ஜம்மு மற்றும் லடாக்கை தனி யூனியன் பிரதேசமாக அறிவிக்க வாய்ப்புள்ளதாக தகவல்கள் வருகிறது. ஆனால் மத்திய அரசு சார்பாக இது தொடர்பாக எந்த அறிவிப்பும் வெளியாகவில்லை.

எப்படி முடியும்
காஷ்மீரை மூன்றாக பிரிப்பதன் மூலம் மத்திய அரசுக்கு சில சாதகமான சூழ்நிலைகள் உருவாகும் என்றும் அரசியல் வல்லுநர்கள் கூறுகிறார்கள். அதில் முதலாவது காஷ்மீர் பிரிவினைவாதிகள் இதனால் மொத்தமாக முடக்கப்பட வாய்ப்புள்ளது. இப்போது காஷ்மீர் பிரிவினைவாத இயக்கங்கள் எல்லாம் ஒன்றாக இருக்கிறது.

என்ன நடக்கும்
ஆனால் காஷ்மீர் மூன்றாக பிரிக்கப்பட்டால், பிரிவினைவாதிகளுக்கு இடையிலும் சிக்கல் ஏற்படும். சிலர் ஜம்முவிற்காக போராடுவார்கள், சிலர் காஷ்மீருக்காக போராடுவார்கள், இன்னும் சிலர் லடாக்கிற்கு உரிமை கோருவர்கள். இதனால் மத்திய அரசின் கை ஓங்கும்.

என்ன நிர்வாகம்
அதேபோல் நிர்வாக ரீதியாகவும் மூன்று பகுதிகளை எளிதாக நிர்வகிக்க முடியும் என்று பாஜக கருதுகிறது. ஜம்முவில் உள்ள படைகளை மொத்தமாக காஷ்மீருக்கு மட்டும் அனுப்பி. அதை எளிதாக கட்டுபடுத்த முடியும். ஜம்மு சாதாரண மாநிலம் போல அமைதியாக இருக்கும், என்று மத்திய பாஜக அரசு நினைக்கிறது.

காஷ்மீர் என்ன
அது போக ஜம்மு காஷ்மீர் மூன்றாக பிரிக்கப்பட்டால், லடாக், ஜம்மு இரண்டு மாநிலங்களிலும் நடக்கும் தேர்தல்களில் பாஜக வெல்லவே அதிக வாய்ப்புள்ளது. காஷ்மீரில் மட்டும் பாஜக தோல்வி அடையலாம், அல்லது கூட்டணி ஆட்சி அமைக்கலாம். இதனால் காஷ்மீரின் அனைத்து வலுவான மாநில கட்சிகளும் மொத்தமாக வலிமை இழக்கும் என்றும் கூறுகிறார்கள்.

மாநில கட்சிகள்
மாநில கட்சிகள் இங்கு வலிமை இழக்கும் காரணத்தால் எதிர்காலத்தில் அங்கு பாஜக தனிப்பெரும் கட்சியாக மாற வாய்ப்புள்ளது. அதேபோல் லடாக்கில் சீனாவின் ஆக்கிரமிப்பை கட்டுப்படுத்தவும் இது உதவியாக இருக்கும் என்று மத்திய பாஜக அரசுநினைக்கிறது. அதே சமயம் ஜம்மு காஷ்மீரில் இதனால் மிகப்பெரிய புரட்சி வெடிக்க கூட வாய்ப்புள்ளது.
-
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம்












Click it and Unblock the Notifications