அதோ வானிலே.. பறந்து கொண்டே பட்டையைக் கிளப்பும் ட்யூன் போட்ட ஆர்.டி. பர்மன்
டெல்லி: ஞானிகளுக்கு எந்த இடமாக இருந்தாலும் கவலை இல்லை.. அவர்களது ஞானம் நூபர கங்கை போல பொங்கிப் பெருக்கெடுக்கும். ஆர்.டி. பர்மன் போன்ற இசை மேதைகளுக்கும் அப்படித்தான். இடம் குறித்துக் கவலை இல்லாமல் இசை மழை பொழிந்தபடி இருக்கும்.
ஆர்.டி.பர்மனின் இசை மழையில் நனையாதவர்கள் கொடுத்து வைக்காதவர்கள் என்றே சொல்ல வேண்டும். அப்படிப்பட்ட இசை மேதையின் இசை மூளையிலிருந்து கொப்பளித்துக் கொட்டிய இசை முத்துக்கள் ஏராளம் ஏராளம்.
அதிலும் தரையை விட வானில் பறந்தபடி அவர் போட்டு அட்டகாசமான மெட்டுக்களைப் பெரிய பட்டியலே போடலாம்.

பாம்பே டூ டெல்லி
ஒருமுறை பாம்பே டூ டெல்லி இடையே விமானத்தில் பறந்தபோதுதான் 1971ம் ஆண்டு வெளியான கத்தி பதங்க படத்திற்காக அவர் யே ஜோ மொஹபத் ஹை என்ற சூப்பர்ஹிட் பாடலுக்கான மெட்டைப் போட்டார். ராஜேஷ் கன்னா நடிப்பில் வெளியான ஹிட் படம் அது.

டென்ஷனைக் குறைக்க போட்ட மெட்டு
அந்த விமானத்தில் பர்மனுடன், ராஜேஷும் பயணித்தார். அப்போது தான் டென்ஷனாக இருப்பதாகவும், ஏதாவது ட்யூனை ஹம் செய்யுமாறும் அவர் பர்மனிடம் கேட்க அவர் ஹம் செய்த ட்யூன்தான் இது. இது பின்னர் படத்திற்குப் பயன்படுத்தப்பட்டது.

சொக்கிப் போன பயணிகள்
பாடல் கேட்டது என்னவோ கன்னாதான். ஆனால் பாடலைக் கேட்டு சுற்றியி்ருந்த பயணிகள் எல்லாரும் சொக்கிப் போய் விட்டார்களாம். அப்போதே தெரிந்து விட்டது இந்த மெட்டு செம ஹிட்டாகும் என்று.

பாட்டை சேருங்க
விமான பயணம் முடிந்துதம் தரையிறங்கிய பின்னர் தயாரிப்பாளர்- இயக்குநர் சக்தி சமந்தாவை அழைத்து கத்தி பதங் படத்தில் இந்தப் பாட்டை சேர்க்குமாறு வற்புறுத்திக் கேட்டுக் கொண்டாராம் கன்னா.
கிஷோர் குமார் குரலில்
இந்தப் பாடலை கிஷோர் குமார் பாடி பெரும் புகழ் பெற்றது. இதற்காக பிலிம்பேர் சிறந்த பாடகருக்கான விருதுக்கும் கிஷோர் பரிந்துரைக்கப்பட்டார். இருப்பினும் மன்னா டே தனது ஏ பாய் ஸாரா தேக் கே சல் என்ற பாடலுக்காக விருதைத் தட்டிச் சென்று விட்டார். அது ராஜ் கபூரின் மேரா நாம் ஜோக்கரில் இடம் பெற்ற பாடலாகும்.












Click it and Unblock the Notifications